யு.டி.ஐ., பங்கு வெளியீடு; மத்திய அரசு ஒப்புதல்யு.டி.ஐ., பங்கு வெளியீடு; மத்திய அரசு ஒப்புதல் ... கணினி மோசடியில் வங்கி டிபாசிட்டிற்கு உத்தரவாதம்; ‘சைபர் கிரைம்’ பாதுகாப்பு விதிமுறைகள் வெளியீடு கணினி மோசடியில் வங்கி டிபாசிட்டிற்கு உத்தரவாதம்; ‘சைபர் கிரைம்’ ... ...
தமிழகத்தில் புதிய தொழில்முனைவோர் ஆறு ஆண்டுகளில் 3,000 உருவாக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2018
23:30

தமி­ழ­கத்­தில், ஆறு ஆண்­டு­களில், 3,000 புதிய தொழில்­மு­னை­வோர் உரு­வா­கி­யுள்­ள­தாக, தொழில் துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர். ஆனால், புதிய தொழில்­மு­னை­வோ­ருக்­கான அரசு சலு­கை­கள் பற்­றிய விழிப்­பு­ணர்வு, போதிய அள­வில் சென்­ற­டை­ய­வில்லை என, வருத்தம் தெரி­விக்­கின்­ற­னர்.

குறு, சிறு மற்­றும் நடுத்­தர தொழில் நிறு­வ­னங்­களை ஊக்­கு­விக்­கும் வகை­யில், பல்­வேறு சிறப்பு திட்­டங்­களை, தமி­ழக அரசு செயல்­ப­டுத்தி வரு­கிறது. இதே­போன்று, புதிய தொழில்­மு­னை­வோர்­களை உரு­வாக்­கு­வ­தற்­கும், தமி­ழக அரசு பல்­வேறு திட்டங்­களை செயல்­படுத்தி வரு­கிறது.

இது குறித்து, தொழில் துறை அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது: தமி­ழ­கத்­தில், புதிய தொழில்­மு­னை­வோர்­களை உரு­வாக்­கும் வகை­யில், ‘புதிய தொழில்­முனை­வோர் மற்­றும் தொழில் நிறு­வன மேம்பாட்டு திட்டம்’ 2012ம் ஆண்டு துவங்­கப்­பட்­டது. இந்த திட்­டத்­தின் கீழ், புதிய தொழில் முனை­வோர், 5 சத­வீ­தம் முத­லீடு செய்­தால், தமி­ழக அரசு, 25 சத­வீ­தம் மானி­யம் வழங்­கு­கிறது. மேலும், 70 சத­வீ­தம் வங்கி கடன் பெற்று தரப்­ப­டு­கிறது.

பொது­வாக, தொழில் துவங்கி செயல்­பாட்­டுக்கு வந்­த­பின் தான், அரசு மானி­யம் வழங்­கும். இந்த திட்­டத்­தில், வங்கி கடன் கிடைத்த உடன், முன்­கூட்­டியே, 25 சத­வீ­தம் அரசு மானி­யம் வழங்­கப்­ப­டு­கிறது. இத்­திட்­டத்­தின் கீழ், 2012 முதல், 2018 மார்ச் வரை, 3,000 புதிய தொழில்­மு­னை­வோர் உருவா­கி­யுள்ள­னர். இவர்­க­ளுக்கு மானி­ய­மாக, 246 கோடி ரூபாய் இது­வரை வழங்­கப்­பட்டு உள்­ளது. ஆனால், இத்­திட்டம் குறித்து, இளம் தலை­மு­றை­யி­ன­ருக்கு போதிய விழிப்­புணர்வு இல்லை.

புதிய தொழில்­மு­னை­வோ­ராக உரு­வாக, அரசு வழங்­கும் சலு­கை­கள் குறித்­தும் தெரிந்­தி­ருக்­க­ வில்லை. எனவே, புதிய தொழில்­மு­னை­வோர் பலரை உரு­வாக்க, தமிழக அரசு கூடு­தல் கவ­னம் செலுத்தி, விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்த வேண்­டும். இவ்­வாறு அவர்­கள் கூறினர்.

– நமது நிரு­பர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)