பதிவு செய்த நாள்
30 ஆக2018
23:30
தமிழகத்தில், ஆறு ஆண்டுகளில், 3,000 புதிய தொழில்முனைவோர் உருவாகியுள்ளதாக, தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், புதிய தொழில்முனைவோருக்கான அரசு சலுகைகள் பற்றிய விழிப்புணர்வு, போதிய அளவில் சென்றடையவில்லை என, வருத்தம் தெரிவிக்கின்றனர்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு சிறப்பு திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதேபோன்று, புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்கும், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இது குறித்து, தொழில் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் வகையில், ‘புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம்’ 2012ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், புதிய தொழில் முனைவோர், 5 சதவீதம் முதலீடு செய்தால், தமிழக அரசு, 25 சதவீதம் மானியம் வழங்குகிறது. மேலும், 70 சதவீதம் வங்கி கடன் பெற்று தரப்படுகிறது.
பொதுவாக, தொழில் துவங்கி செயல்பாட்டுக்கு வந்தபின் தான், அரசு மானியம் வழங்கும். இந்த திட்டத்தில், வங்கி கடன் கிடைத்த உடன், முன்கூட்டியே, 25 சதவீதம் அரசு மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 2012 முதல், 2018 மார்ச் வரை, 3,000 புதிய தொழில்முனைவோர் உருவாகியுள்ளனர். இவர்களுக்கு மானியமாக, 246 கோடி ரூபாய் இதுவரை வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், இத்திட்டம் குறித்து, இளம் தலைமுறையினருக்கு போதிய விழிப்புணர்வு இல்லை.
புதிய தொழில்முனைவோராக உருவாக, அரசு வழங்கும் சலுகைகள் குறித்தும் தெரிந்திருக்க வில்லை. எனவே, புதிய தொழில்முனைவோர் பலரை உருவாக்க, தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|