பதிவு செய்த நாள்
31 ஆக2018
10:22
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் செப்டம்பர் மாத வர்த்தகத்தை சரிவுடன் துவக்கி உள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஆக.,31, காலை 9.15 மணி நிலவரம்)சென்செக்ஸ் 32.76 புள்ளிகள் சரிந்து 38,657.34 புள்ளிகளாகவும், நிப்டி 10 புள்ளிகள் சரிந்து 11,666.80 புள்ளிகளாகவும் இருந்தன.
டிசிஎஸ், பிபிசிஎல், வேதாந்தா, ஹிண்டல்கோ, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. தொடர்ந்து காலை 9.56 மணியளவில் ஐடி, உலோக துறை, ஆட்டோ துறை பங்குகள் உயர்ந்ததை அடுத்து பங்குச்சந்தைகள் உயரத் துவங்கின. செனசெக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.
சென்செக்ஸ் 107.32 புள்ளிகள் உயர்ந்து 38,797.42 புள்ளிகளாகவும், நிப்டி 38.90 புள்ளிகள் உயர்ந்து 11,715.70 புள்ளிகளாகவும் இருந்தன. விப்ரோ, பார்தி இன்பிராடெல், எச்சிஎல் டெக் உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|