இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடுகள்இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடுகள் ... டி.சி.எஸ்., புதிய சாதனை டி.சி.எஸ்., புதிய சாதனை ...
‘ஜிம் – 1’ புரிந்துணர்வு ஒப்பந்தம் 70 நிறுவனங்கள் மட்டுமே முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2018
00:09

முதல் சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில், புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் செய்த நிறு­வ­னங்­களில், 70 நிறு­வ­னங்­கள் மட்­டுமே முத­லீடு செய்­துள்­ள­தாக, தொழில்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­துஉள்­ள­னர்.

தமி­ழக அரசு சார்­பில், 2015ம் ஆண்டு, முதல் சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­கள் மாநாடு சென்­னை­யில் நடந்­தது.இதில், 9 நாடு­கள், 23 பங்­கு­தா­ரர் நிறு­வ­னங்­கள் பங்­கு­பெற்று, 2.42 லட்­சம் கோடி ரூபாய் முத­லீ­டு­கள் பெறப்­பட்­டன. இதில், மொத்­தம், 98 நிறு­வ­னங்­க­ளு­டன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

இதில், 70 நிறு­வ­னங்­கள் மட்­டுமே, தொழில் துவங்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்­ள­தா­க­வும், இதர நிறு­வ­னங்­கள், முத­லீடு செய்ய சாத்­தி­ய­மில்லை என கூறி­விட்­ட­தா­க­வும் சொல்­லப்ப­டு­கிறது.

இது­கு­றித்து, தொழில்­துறை அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது:முதல் சர்­வ­தேச முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில், 98 நிறு­வ­னங்­கள் தமி­ழ­கத்­தில் தொழில் துவங்க முன் வந்­தன. இவற்­று­டன், 2.42 லட்­சம் கோடி ரூபாய் முத­லீடு ­க­ளுக்கு, புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் மேற்­கொள்­ளப்­பட்­டது.

இதில், ஏற்­க­னவே, 23 நிறு­வ­னங்­கள் உற்­பத்­தியை துவங்­கி­விட்­டன. இவற்­று­டன் சேர்த்து, மொத்­தம், 70 நிறு­வ­னங்­கள் மட்­டுமே, தமி­ழ­கத்­தில், தொழில் துவங்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டுள்ளன.இதன் மூலம், மொத்­தம், 70 ஆயி­ரம் கோடி ரூபாய் முத­லீ­டு­கள் கிடைத்­துள்ளன.குறிப்­பாக, உற்­பத்தி துறை­யில் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் மேற்­கொள்­ளப்­பட்ட, 50 நிறு­வ­னங்­களில், 45 நிறு­வ­னங்­கள், 37 ஆயி­ரம் கோடி முத­லீடு செய்­துள்ளன.

மின் உற்­பத்தி துறை­யில், 15 நிறு­வ­னங்­களில், மூன்று நிறு­வ­னங்­கள், 20 ஆயி­ரம் கோடி முத­லீடு செய்ய முன்­வந்­துள்ளன.மெகா, சூப்­பர், அல்ட்ரா என, மூன்று பிரி­வாக நிறு­வ­னங்­கள் வகைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளன.இதில், மெகா நிறு­வ­னம் என்­றால், உற்­பத்தி துவங்க மூன்று ஆண்­டு­களும், சூப்­பர் என்­றால், ஐந்து ஆண்­டு­களும், அல்ட்ரா என்­றால், 7 ஆண்­டு­களும் அவ­கா­சம் வழங்­கப்­பட்­டுள்ளன.

அதற்­குள், இந்த நிறு­வ­னங்­கள் தங்­க­ளது உற்­பத்­தியை துவக்க வேண்­டும் என, ஒப்­பந்­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில், ஒப்­பந்­தம் செய்த இதர நிறு­வ­னங்­கள், தொழில் துவங்க முன்­வ­ரு­வார்­களா என்­பது குறித்து தெரி­ய­வில்லை.இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.
– நமது நிரு­பர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)