பதிவு செய்த நாள்
05 செப்2018
00:09
முதல் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிறுவனங்களில், 70 நிறுவனங்கள் மட்டுமே முதலீடு செய்துள்ளதாக, தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
தமிழக அரசு சார்பில், 2015ம் ஆண்டு, முதல் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடந்தது.இதில், 9 நாடுகள், 23 பங்குதாரர் நிறுவனங்கள் பங்குபெற்று, 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் பெறப்பட்டன. இதில், மொத்தம், 98 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதில், 70 நிறுவனங்கள் மட்டுமே, தொழில் துவங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், இதர நிறுவனங்கள், முதலீடு செய்ய சாத்தியமில்லை என கூறிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து, தொழில்துறை அதிகாரிகள் கூறியதாவது:முதல் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், 98 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் துவங்க முன் வந்தன. இவற்றுடன், 2.42 லட்சம் கோடி ரூபாய் முதலீடு களுக்கு, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதில், ஏற்கனவே, 23 நிறுவனங்கள் உற்பத்தியை துவங்கிவிட்டன. இவற்றுடன் சேர்த்து, மொத்தம், 70 நிறுவனங்கள் மட்டுமே, தமிழகத்தில், தொழில் துவங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.இதன் மூலம், மொத்தம், 70 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் கிடைத்துள்ளன.குறிப்பாக, உற்பத்தி துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட, 50 நிறுவனங்களில், 45 நிறுவனங்கள், 37 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளன.
மின் உற்பத்தி துறையில், 15 நிறுவனங்களில், மூன்று நிறுவனங்கள், 20 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளன.மெகா, சூப்பர், அல்ட்ரா என, மூன்று பிரிவாக நிறுவனங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.இதில், மெகா நிறுவனம் என்றால், உற்பத்தி துவங்க மூன்று ஆண்டுகளும், சூப்பர் என்றால், ஐந்து ஆண்டுகளும், அல்ட்ரா என்றால், 7 ஆண்டுகளும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளன.
அதற்குள், இந்த நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை துவக்க வேண்டும் என, ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒப்பந்தம் செய்த இதர நிறுவனங்கள், தொழில் துவங்க முன்வருவார்களா என்பது குறித்து தெரியவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|