பதிவு செய்த நாள்
06 செப்2018
01:58
உடுமலை:கேரளாவில் விற்பனை குறைந்துள்ளதால், கறிக்கோழி விலை, கிலோவுக்கு, 20 ரூபாய் வரை சரிந்து உள்ளது.
தமிழகத்தில், 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. வாரத்துக்கு, 70 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, கேரளாவுக்கு, 30 லட்சம் கறிக்கோழிகள் வரை அனுப்பப்பட்டன.கேரளாவில் பெய்த கன மழையால், பிரதான ரோடுகள் துண்டிப்பு, இயல்பு வாழ்க்கை திரும்பாதது ஆகிய காரணங்களால், விற்பனை சரிந்து உள்ளது.
இதனால், தமிழகத்தில்கறிக்கோழி தேக்கம் அதிகரித்து, விலை சரிந்து வருகிறது.கடந்த மாதம், கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோவுக்கு, 77 ரூபாய் வரை இருந்தது. சில வாரங்களாக விலை வீழ்ச்சி கண்ட நிலையில், நேற்று, 57 ரூபாயாக குறைந்தது. சில்லரை விற்பனை விலை, கிலோவுக்கு, 160 ரூபாயிலிருந்து, 120 ரூபாயாக குறைந்துள்ளது.
கறிக்கோழி பண்ணையாளர்கள் ஒருங்கிணைப்பு குழு செயலர் சுவாதி கண்ணன் கூறுகையில், ‘‘கேரளாவுக்கு, 30 லட்சம்கறிக்கோழிகள் விற்பனைக்கு செல்லும். ஆனால் அங்கு, கன மழையால் ஏற்பட்ட பாதிப்பால், விற்பனை பாதியாக குறைந்துள்ளது.‘‘இதனால், கறிக்கோழி தேக்கம் அதிகரித்து விலை சரிந்துள்ளது. ஒரு வாரத்தில், மீண்டும் விலை உயரும் என்ற நம்பிக்கை உள்ளது,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|