பதிவு செய்த நாள்
06 செப்2018
01:59
புதுடில்லி:‘‘சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் அவ்வப்போது ஏற்படும் ஏற்ற, இறக்கங்களுக்கு ஏற்ப, மத்திய அரசால் கொள்கைகளை மாற்றிக் கொண்டிருக்க முடியாது’’ என, ‘நிடி ஆயோக்’ துணை தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு போன்றவற்றால், பெட்ரோல், டீசல் விலை, இதுவரை காணாத வகையில் உயர்ந்து உள்ளது.இதையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசும், ‘வாட்’ வரியை, மாநில அரசுகளும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
இது குறித்து, ராஜிவ் குமார் கூறியதாவது:ஜூன் மாதம், கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. ஜூலையில் குறைந்தது. ஆகஸ்டில், மீண்டும் உயர்ந்தது. இதே போன்ற நிலை, மீண்டும் ஏற்படலாம். ஆகவே, சந்தையின் ஏற்ற, இறக்கங்களுக்கு ஏற்ப, மத்திய அரசு, பெட்ரோல், டீசல் தொடர்பான கொள்கைகளை அடிக்கடி மாற்றிக் கொள்ள முடியுமா? முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது, மத்தியஅரசு, 1 லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு, உற்பத்தி வரியாக, முறையே, 19.48 ரூபாய் மற்றும் 15.33 ரூபாய் வசூலிக்கிறது. இத்துடன், மாநில அரசுகள், ‘வாட்’ எனப்படும் மதிப்பு கூட்டு வரியை வசூலிக்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|