பதிவு செய்த நாள்
08 செப்2018
00:01
சத்தியமங்கலம்:தரமில்லாத உரங்கள், வெயில் அதிகரித்திருப்பதுஆகியவற்றால், மல்லிகைப் பூ விளைச்சல் குறைந்து வருகிறது. இதனால், வருவாய் மிக குறைந்துள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட கிராமங்களில், 10 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் மல்லிகைப் பூ சாகுபடி நடந்து வருகிறது.இங்கு கிடைக்கும் மல்லிகைப் பூ, சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகள் சிலவற்றுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக மழை மற்றும் வெயில் என பருவநிலை மாறி மாறி வந்ததால், மல்லிகைப் பூ விளைச்சல் ஏற்றமும், இறக்கமுமாக உள்ளது.தற்போது, தண்ணீர் இருந்தும் கடும் வெயில், தரமில்லாத உரம் ஆகிய காரணங்களால், எதிர்பார்த்த அளவு மல்லிகைப் பூ, விளைச்சல் இல்லை. இதனால், மல்லிகை கிலோ ஒன்றுக்கு, 125 முதல், 200 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது.
நாளுக்கு நாள் மல்லிகை விளைச்சல் குறைந்தால், சாகுபடியை நிறுத்திவிட்டு வேறு பயிர்களை சாகுபடி செய்ய வேண்டியதாகி விடும் என, மல்லிகைப் பூ விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|