பதிவு செய்த நாள்
08 செப்2018
00:00
கரூர்:‘‘தமிழகத்தில் கயிறு சார்ந்த தொழில் முனைவோரை உருவாக்க, கரூர் உட்பட, 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன,’’ என, பொள்ளாச்சி கயிறு வாரிய மண்டல மேலாளர், பூபாலன் தெரிவித்தார்.
இந்திய அரசின் பொள்ளாச்சி வாரிய மண்டலம், கரூர் மாவட்ட தொழில் மையம் சார்பில், தேங்காய் நார் தொழில் குறித்த விழிப்புணர்வு முகாம், தொழில் மைய பொது மேலாளர், ரமேஷ் தலைமையில் நடந்தது.அதில், மண்டல மேலாளர், பூபாலன் பேசியதாவது:
தென்னை மட்டையின் பயன்பாடு, 20 ஆண்டுகளில், 100 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலகத்திலேயே கேரளா, தமிழகத்தில் தான் தரமான தேங்காய் மட்டைகள் கிடைக்கின்றன.அதில் இருந்து, ‘காயர் மேட், ஜியோ பேக், காயர் பிளே’ உள்ளிட்ட, 103 மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தமிழகத்தில் இருந்து மூலப்பொருட்களை வாங்கும் கேரளா, அதை மதிப்பு கூட்டி, சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
தமிழகத்தில் கயிறு சார்ந்த தொழில் முனை வோரை உருவாக்க, கரூர் உள்ளிட்ட, 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதற்காக, 33 திட்டங்களை கயிறு வாரியம் தயாரித்துள்ளது. தொழில்நுட்ப தகவல், நிதி வசதி, அரசின் சலுகைகள் குறித்து, தொழில் முனைவோருக்கு தெரிவிக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|