பதிவு செய்த நாள்
08 செப்2018
00:03
புதுடில்லி:‘நாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்த, கடன் காப்பீட்டு வசதியை தாராளமாக வழங்க வேண்டும்’ என, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இக்கூட்டமைப்பின் தலைவர், கணேஷ் குப்தா கூறியதாவது:ஏற்றுமதியாளர்கள், பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். அவர்களின் இழப்பீடு கோரிக்கைகளை முழுவதுமாக நிராகரிக்காமல், விரைந்து தீர்வு காண வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்க, ஏற்றுமதி கடன் உறுதி கழகத்திற்கு உத்தரவிட வேண்டும் என, மத்திய வர்த்தக அமைச்சகத்தை கேட்டுள்ளோம்.
ஏற்றுமதியை ஊக்குவிக்க, கடன் காப்பீடு அவசியம். ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான ஏற்றுமதிக்கு, தாராளமாக கடன் காப்பீடு வசதி வழங்க வேண்டும். இதனால், அந்நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
வெளிநாடுகளில், அரசியல் மற்றும் வர்த்தகப் பிரச்னைகளால், பணம் வராமல் பாதிக்கப்படும் ஏற்றுமதியாளர்களுக்கு, கடன் காப்பீடு திட்டம் உதவுகிறது. இந்த வசதியை, ஏற்றுமதி கடன் உத்தரவாத கழகம் வழங்குகிறது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க, இக்கழகத்திற்கு, மத்திய அரசு, சமீபத்தில், 2,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|