பதிவு செய்த நாள்
25 செப்2018
23:48
இஸ்லாமாபாத் : ‘இந்தியா – பாகிஸ்தான் இடையே, 3,700 கோடி டாலர் அளவிற்கு பரஸ்பர வர்த்தக வாய்ப்பு இருந்தும், அரசியல் காரணங்களால், முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை’ என, உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியா – பாகிஸ்தான் இடையே இயல்பான வர்த்தக உறவு இல்லாததால், தெற்காசிய பிராந்தியத்தில், உயர் மதிப்புள்ள வர்த்தகப் பிரிவின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா, 1996ல், ‘வர்த்தகத்திற்கு மிகவும் விருப்பமான தேசம்’ என்ற அந்தஸ்தை, பாகிஸ்தானுக்கு வழங்கியது. ஆனால், பாகிஸ்தான் இந்த அந்தஸ்தை, இந்தியாவுக்கு இன்னும் வழங்காமல் உள்ளது.
இந்த அந்தஸ்து பெற்ற நாடுகள், ‘சாப்டா’ எனப்படும், தெற்காசிய தாராள வர்த்தகப் பகுதி நாடுகளில் இருந்து வரி விலக்கற்ற பொருட்களை, குறைந்த வரியில் இறக்குமதி செய்யலாம். அதேசமயம், இந்தியா உள்ளிட்ட, தெற்காசிய தாராள வர்த்தகப் பகுதி நாடுகளில் இருந்து இறக்குமதியாகும், 936 பொருட்களுக்கு, பாகிஸ்தான், 17.9 சதவீத வரி விதிக்கிறது.
இந்தியா, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும், 64 பொருட்களுக்கு, 11.7 சதவீத வரி விதிக்கிறது. பாகிஸ்தான், 1,209 இந்தியப் பொருட்கள் இறக்குமதிக்கு, தடை விதித்துள்ளது. இதனால், இப்பொருட்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற மூன்றாவது நாடுகள் வழியாக, பாகிஸ்தானிற்கு செல்கின்றன.
மேலும், துறைமுகம் மற்றும் அடாரி – வாகா தரைவழி சரக்கு போக்குவரத்திலும், இந்தியா – பாகிஸ்தான் இடையே, பரஸ்பர கட்டுப்பாடுகள் உள்ளன. இத்துடன், இரு நாடுகளில் நிலவும் விசா கட்டுப்பாடு, அரசியல் பதற்றம், சுமுகமற்ற வர்த்தக சூழல் போன்றவை, தெற்காசிய பிராந்திய வர்த்தக கூட்டுறவு வலுப்பெற தடை கற்களாக உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|