பதிவு செய்த நாள்
28 செப்2018
00:49
சென்னை : டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், இணைய பாதுகாப்பு தீர்வு மையம் ஒன்றை, சென்னையில் துவங்கி உள்ளது.
உலகளவில், இணையங்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வரும் நிலையில், இணைய பாதுகாப்புக்கான தீர்வுகளை வழங்குவதற்காக, அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய, ‘சைபர் செக்யூரிட்டி ரெஸ்பான்ஸ் சென்டர்’ எனும் மையத்தை, ‘டாடா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம் சென்னையில் நிறுவி உள்ளது. துபாய், சிங்கப்பூர், புனே ஆகிய இடங்களுக்கு அடுத்தபடியாக, இத்தகைய மையம் சென்னையில் துவங்கப்பட்டு உள்ளது.
இந்த மையங்களின் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நிறுவனங்கள் தங்களது இணையத்தை பாதுகாத்துக் கொள்ளவும், தாக்குதல்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளவும் முடியும்.சென்னை மையத்தை துவக்கி வைத்த, ‘டேடா செக்யூரிட்டி கவுன்சில் ஆப் இந்தியா’வின் தலைமைச் செயல் அதிகாரி, ரமா வேதாஸ்ரீ கூறியதாவது:
சைபர் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், டாடா கம்யூனிகேஷன்ஸ் போன்ற நிறுவனங்கள், உலகளவிலும், உள்நாட்டிலும், பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் முதலீடு செய்து வருவது, எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|