பதிவு செய்த நாள்
03 அக்2018
00:47
‘‘இந்தியா,
அமெரிக்காவுடன் வர்த்தக உடன்பாடு செய்து, என்னை மகிழ வைக்க
விரும்புகிறது,’’ என, டொனால்டு டிரம்ப் எகத்தாளமாக தெரிவித்து
உள்ளார்.
சமீபத்தில், அமெரிக்க வர்த்தகத் துறை துணை பிரதிநிதி, மார்க்
லின்ஸ்காட், இந்திய வர்த்தக துறை உயரதிகாரிகளுடன், பரஸ்பர வர்த்தகம்
மற்றும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து, பேச்சு நடத்தினார்.இந்நிலையில்,
வாஷிங்டனில், மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளுடன் ஏற்பட்டுள்ள வர்த்தக
உடன்பாட்டை இறுதி செய்த பின், டிரம்ப் பேசியதாவது:
இந்தியா மற்றும் பிரதமர்
மோடி உடனான நல்லுறவு சிறப்பாக உள்ளது.அதே சமயம், இந்தியா, வரிகளின் ராஜாவாக
உள்ளது. நம், ‘ஹார்லி டேவிட்சன்’ மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல
பொருட்களுக்கு, இந்தியா மிக அதிக வரி விதிக்கிறது.அதே அளவிற்கு, இந்திய
பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதிக்க நேரும். இந்தியர்கள், நம் அறிவாற்றலை
உணர்ந்து கொண்டனர். அதனால் தான், நம் வர்த்தக பிரதிநிதியுடன் பேசும்போது,
‘அமெரிக்காவுடன் வர்த்தக உடன்பாடு செய்து, டொனால்டு டிரம்பை சந்தோஷமாக
வைத்திருக்க விரும்புகிறோம்’ என, தெரிவித்து உள்ளனர்.
ஆகவே, பரஸ்பர வரி
குறைப்பு தொடர்பாக, இரு தரப்பிலும் பேச்சு நடந்து வருகிறது.நான்,
இந்தியாவில் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி வசூலிக்கப்படுவது குறித்து,
மோடியுடன் பேசினேன். அப்போது அவர், ‘இது போல யாரும் பேசியதில்லை’
என்றார்.நான் இதை மிகைப்படுத்தி கூறவில்லை. நமக்கு முன் இருந்த பல
அதிபர்கள், வரி உயர்வு குறித்து, இந்தியாவிடம் பேசவே இல்லை.இதற்கு,
பிரேசிலும் ஓர் எடுத்துக்காட்டு. அவர்கள் நினைத்த வரியை, அமெரிக்க
பொருட்கள் மீது சுமத்தி வந்தனர்.இந்தியா, அமெரிக்காவுடன் வர்த்தக உடன்பாடு
காண விரும்புகிறது. இது தொடர்பான பேச்சு நடந்து வருகிறது.இவ்வாறு, அவர்
கூறினார்.
வலிமை உள்ளது!
இந்தியா, அமெரிக்க பொருட்களுக்கு, 100 சதவீத வரி
விதிக்கிறது. நாம், இந்திய பொருட்களுக்கு, 25 சதவீதம் வரி விதித்தால் கூட,
நம் பார்லிமென்டில் எதிர்ப்பு எழுகிறது. இது, சரியான வர்த்தகம் அல்ல.
நமக்கு வரி விதிக்கும் வலிமை உள்ளது. இருந்தும், அதை முழுமையாக
பயன்படுத்தாமல் உள்ளோம். பயன்படுத்தவும் மாட்டோம்.
டொனால்டு டிரம்ப்,
அமெரிக்க அதிபர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|