பதிவு செய்த நாள்
03 அக்2018
15:00
‘வீடுகளுக்கு அனுமதிக்கப்படும் தள பரப்பளவு குறியீடு அதிகரிக்கப்படும்’ என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளதால் வீடுகளின் விலை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை போன்ற நகரங்களில் வீடு அல்லது அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கு, எப்.எஸ்.ஐ., (Floor Space Index) எனப்படும் தள பரப்பு குறியீடு என்ற கட்டட ஒழுங்கு முறை விதி பின்பற்றப்படுகிறது. சென்னையில், நிலத்தின் அளவில் 1.5 மடங்குக்கு தள பரப்பளவு குறியீடு இருக்குமாறு கட்டடங்களை கட்டிக் கொள்ள, அரசுத் தரப்பு அனுமதிக்கிறது.
இந்நிலையில், சென்னை நந்தனத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘வீடுகளுக்கு அனுமதிக்கப்படும் தள பரப்பளவு குறியீடு 1.5-லிருந்து 2ஆக மாற்றியமைக்கப்படும்’ எனவும், இந்த புதிய மாற்றம் இன்று முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவித்தார்.
இந்த மாற்றத்தின் மூலம், இருக்கும் நிலத்தை வைத்து, கூடுதல் அளவுக்கு கட்டடங்களை கட்ட முடியும். இதனால், செலவுகள் குறைந்து, வீடுகளின் விலையும் குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கட்டுமான நிறுவனத்தினர் வீடுகளை குறைந்த வலைக்கு விற்க வாய்ப்புள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|