பதிவு செய்த நாள்
05 அக்2018
11:56
மும்பை : தொடர்ந்து 3வது நாளாக இன்றும் (அக்.,05) இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. சர்வதேச சந்தையில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஆர்பிஐ.,யும் மாதாந்திர கொள்கையை வெளியிட உள்ளதால் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்து, 35,000 புள்ளிகளுக்கும் கீழ் சென்றுள்ளது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 335 புள்ளிகள் சரிந்து 34,833.81 புள்ளிகளாக இருந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு சரிவால் சென்செக்ஸ் கடந்த 2 நாட்களில் மட்டும் 1356.98 புள்ளிகள் சரிந்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு, உள்கட்டமைப்பு, வங்கிகள் உள்ளிட்ட துறை பங்குகள் 10.27 சதவீதம் சரிந்துள்ளது.
நிப்டி 90.40 புள்ளிகள் சரிந்து 10,508.85 புள்ளிகளாக உள்ளது. ஆர்பிஐ பணக்கொள்கையில் வட்டிவிகிதம் உயர்த்தப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக சரிவு ஏற்பட்டுள்ளது. ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசுகி, ஹீரோ மோட்டோ கார்ப், எச்டிஎப்சி வங்கி, எச்டிஎப்சி, டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் 11.27 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|