பதிவு செய்த நாள்
20 அக்2018
00:45
புதுடில்லி: ‘பொதுத் துறை நிறுவனமான, ஓ.என்.ஜி.சி., அதன் நிதி நிலைமை குறித்து வரும் செய்திகள் தவறானவை’ என, தெரிவித்துள்ளது.சமீபத்தில், ஓ.என்.ஜி.சி., நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு, போதிய நிதி கைவசம் இல்லாத காரணத்தால், வங்கி ஓவர் டிராப்ட் வசதியை பயன்படுத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகின.இச்செய்தியை, ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தின் நிதி பிரிவு இயக்குனர், சுபாஷ் குமார் மறுத்துள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:நிறுவனத்தின் சில பகுதிகளில், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க, ஓவர் டிராப்ட் வாங்கியதாக வரும் செய்திகள் உண்மைக்கு மாறானவை. நிறுவனம் மிகவும் வலுவான நிதி நிலையில் உள்ளது.நடப்பு நிதியாண்டில், பட்ஜெட் போடப்பட்ட, 32 ஆயிரத்து, 77 கோடி ரூபாய் செலவுகளை சமாளிக்கும் அளவுக்கு, நிதி நிலை உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த கால கட்டத்திலேயே, அனைத்து தேவைகளையும் நிறைவேற்றினோம். இப்போது எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், ஏன் சிரமப்பட போகிறோம்?நிறுவனத்தின் ஆண்டு வருவாய், 85 ஆயிரம் கோடி ரூபாய். நிறுவனத்தின் மூலதன தேவைகளோடும், செயல்பாட்டு தேவைகளோடும் ஒப்பிடும்போது, சம்பளம் என்பது சொற்பத் தொகையே.இந்நிறுவனம், அரசியல்களுக்கு அப்பாற்பட்ட நிறுவனமாகும்.இவ்வாறு அவர் கூறினார்.அரசின் கைவசம் இருக்கும், எச்.பி.சி.எல்., நிறுவனத்தின் பங்குகளை, ஜனவரி மாதத்தில், 36 ஆயிரத்து, 915 கோடி ரூபாய்க்கு, ஓ.என்.ஜி.சி., வாங்கியது. மேலும், இதற்காக, குறுகிய கால கடனாக, 24 ஆயிரத்து, 881 கோடி ரூபாயை வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|