பதிவு செய்த நாள்
23 அக்2018
23:55
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தற்காலிகமாக சரிந்துள்ளதால், தங்கத்தின் விலை கடந்தாண்டை காட்டிலும், இந்த தீபாவளிக்கு 1 சவரனுக்கு, 1,360 ரூபாய் விலை உயர்ந்து உள்ளது.
வருவாய் அதிகரிக்கும் :
ஈரோடு மாவட்ட தங்கம், வெள்ளி, வைரம் வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.தர்மராஜ் கூறியதாவது:ஈரோடு மாவட்டத்தில், 500 தங்க நகைக்கடைகள் உள்ளன. அதில், 200 கடைகள் மாநகரில் உள்ளன. கடந்த, 2017 அக்டோபரில், ஒரு கிராம் தங்கம், 2,825 ரூபாய், ஒரு சவரன், 22 ஆயிரத்து, 600 ரூபாய் இருந்தது. நேற்று ஒரு கிராம், 2,995 ரூபாய், ஒரு சவரன், 23 ஆயிரத்து, 960 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த ஆண்டை காட்டிலும், 1 சவரனுக்கு, 1,360 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.
கடந்த மாதம், மத்திய நிதியமைச்சர் தலைமையில், மாநில பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம், டில்லியில் நடந்தது. இதில், தங்கத்தின் மீதான வரியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. கற்கள் பதித்த ஆபரண தங்கத்திற்கும் மட்டும், 5 சதவீதத்தில் இருந்து, 7.5 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது. இது சாதாரண வியாபாரிகளை பாதிக்காது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம், அரசு வருவாய் அதிகரிக்கும்.
ஆடம்பர பொருட்கள் :
தமிழகத்தை பொறுத்த வரை, நல்ல மழை பெய்துள்ளது. ஆற்றில் நீர் வளம் பெருகியுள்ளதால், விவசாயிகள் விவசாயத்தில் கையிருப்பை முதலீடு செய்துள்ளனர். அதன் லாபம் தீபாவளிக்கு கிடைக்காது, பொங்கல் பண்டிகையின் போது பலன் தரும்.ஈரோடு மாவட்டத்தில், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். அவர்கள் தீபாவளி போனஸ் தொகையில், ஒரு பகுதியை தங்கத்தில் முதலீடு செய்வது போய், இன்று, மொபைல் போன், வீட்டு உபயோக பொருட்கள், இரு சக்கர வாகனங்கள் வாங்குவது என, மதிப்பிழக்கும் ஆடம்பர பொருட்களை வாங்கி வருகின்றனர். கடந்த ஆண்டு தீபாவளி சமயத்தில், 25 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடந்தது. இந்தாண்டு அதை விட குறைவாகவே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
– நமது சிறப்பு நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|