பதிவு செய்த நாள்
02 நவ2018
02:50
வாஷிங்டன்:அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், சிறப்பு திட்டத்தின் கீழ் இறக்குமதியாகும், 90 பொருட்களுக்கு அளித்து வந்த வரி விலக்கு சலுகையை ரத்து செய்துள்ளார். நேற்று, இந்த உத்தரவுஅமலுக்கு வந்தது.
அமெரிக்கா, சிறப்பு திட்டத்தின் கீழ், வளரும் நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு வரி விலக்கு சலுகை வழங்கி வருகிறது.அதில், 90 பொருட்களுக்கு, வரி விலக்கு சலுகை நீக்கப் பட்டு உள்ளது. இவற்றில், 50க்கு மேற்பட்ட பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்வதால், அதிக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
இந்தியா, 2017ல், இத்திட்டத்தின் கீழ், 41,440 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை, வரியின்றி ஏற்றுமதி செய்துள்ளது.தற்போது வரி விலக்கு சலுகை நீக்கப்பட்டதால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும், உலர்ந்த பட்டாணி, பாக்கு, மாம்பழம், கைத்தறி ஆடைகள், தோல் உட்பட, 50 பொருட்களுக்கு, இனி வரி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
வரி விலக்கை பயன்படுத்தி, வளரும் நாடுகள் அளவிற்கு அதிகமாக பொருட்களை குவிப்பதாக, டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.இந்தியா உடன், அர்ஜென்டினா, பிரேசில், துருக்கி, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, ஈக்வடார் ஆகிய நாடுகளும், சிறப்பு திட்டத்தில் பெற்று வந்த வரி விலக்கு சலுகையை இழந்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|