பதிவு செய்த நாள்
02 நவ2018
11:19
மும்பை : சர்வதேச பங்குச்சந்தைகள் வலுவுடன் காணப்படுவதாலும், கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாலும், சர்வதேச சந்தையில் ரூபாயின் மதிப்பு உயர்ந்து வருவதாலும் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன.
வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (நவ.,2) வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 413.15 புள்ளிகள் உயர்ந்து 34,845.15 புள்ளிகளாகவும், நிப்டி 122.85 புள்ளிகள் உயர்ந்து 10,503.30 புள்ளிகளாகவும் உள்ளது. அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர் காரணமாக நெருக்கடிக்கு ஆளாகி இருந்த ஆசிய பங்குச்சந்தைகளும் உயர்வுடன் காணப்படுவதும் பங்குச்சந்தைகளின் உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது.
ஆசியன் பெயின்ட், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப், இண்டஸ்இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, ஐடிசி, பார்தி ஏர்டெல், கோடாக் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் 5.80 சதவீதம் உயர்வுடன் காணப்படுகின்றன. ஆட்டோ, எண்ணெய் மற்றும் எரிவாயு துறை பங்குகள் 2.65 சதவீதம் உயர்வடைந்து காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|