பதிவு செய்த நாள்
13 நவ2018
00:26
புதுடில்லி:கடந்த செப்டம்பரில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 4.5 சதவீதமாக உயர்ந்துள்ளது என, மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:நாட்டின் தொழில் துறை உற்பத்தி, செப்டம்பரில், ௦.௨ சதவீதம் உயர்ந்து, 4.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது, ஆகஸ்டில், 4.3 சதவீதமாக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில், தொழில் துறையில், 77 சதவீத பங்களிப்பை வழங்கும், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, 4.6 சதவீதம் என்ற அளவில், மாற்றமின்றி காணப்பட்டது.அதுபோல, நுகர்வோர் சாதனங்கள் துறையின் உற்பத்தி வளர்ச்சியும், 5.2 சதவீதம் என்ற அளவில், ஏற்ற, இறக்கமின்றி இருந்தது.நுகர்வோர் சாதனங்கள் சாரா துறையின் உற்பத்தி வளர்ச்சி, 6.3 சதவீதத்தில் இருந்து, 6.1 சதவீதமாக குறைந்து உள்ளது.
அதேசமயம், இதே காலத்தில் மின் துறை உற்பத்தி, 7.6லிருந்து, 8.6 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.சுரங்கத் துறையின் உற்பத்தி வளர்ச்சி, மைனஸ், 0.4 சதவீதத்தில் இருந்து, 0.2 சதவீதமாக அதிகரித்து உள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|