பதிவு செய்த நாள்
19 நவ2018
10:54
மும்பை : வர்த்தக வாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்ந்து 35,647.61-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 43.10 புள்ளிகள் உயர்ந்து 10,725.30-ஆகவும் வர்த்தகமாகின.
ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம் காரணமாகவும், அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு, இன்று நடக்கவிருக்கும், ஆர்.பி.ஐ., என்ற, மத்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழுக் கூட்டம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசோடு ஏற்பட்டுள்ள மோதல் தொடருமா; சமாதானம் ஏற்படுமா? என்ற எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. இதன் காரணமாகவும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|