‘ஜிம் – 2’வில் ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு; எம்.எஸ்.எம்.இ., துறை நம்பிக்கை ‘ஜிம் – 2’வில் ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு; எம்.எஸ்.எம்.இ., துறை நம்பிக்கை ...  முடிவுக்கு வந்தது வாழ்நாள் இலவச சேவை; ‘மொபைல் போன்’ நிறுவனங்கள் அதிரடி முடிவுக்கு வந்தது வாழ்நாள் இலவச சேவை; ‘மொபைல் போன்’ நிறுவனங்கள் அதிரடி ...
பண்டிகை கால வாகன விற்பனை சரிவு; தேக்கம் அதிகரிப்பால் முகவர்கள் கவலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 நவ
2018
23:38

புதுடில்லி : கடந்த ஆண்டை விட, இந்தாண்டு, நவராத்திரி, தீபாவளி பண்டிகை காலத்தில், பயணியர் கார் மற்றும் இரு சக்கர வாகன விற்பனை குறைந்துள்ளதாக, வாகன முகமை நிறுவனங்கள் கூட்டமைப்பான, ‘படா’ தெரிவித்து உள்ளது.

இது குறித்து, இக்கூட்டமைப்பு வெளியிட்டு உள்ள அறிக்கை: கடந்த, 2017ல், செப்., 21 முதல், நவ., 1 வரையிலான பண்டிகை காலத்தில், ஒட்டுமொத்தமாக, 23,01,986 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன.இது, இந்தாண்டு, அக்., 10 முதல், நவ., 1 வரையிலான, 42 நாட்களில், 11 சதவீதம் குறைந்து, 20,49,391 ஆக சரிவடைந்துள்ளது.

இதே காலத்தில், பயணியர் வாகனப் பதிவு, 14 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 3,33,456லிருந்து, 2,87,717 ஆக குறைந்து உள்ளது.கடன் வசதிஇரு சக்கர வாகனப்பதிவு, 13 சதவீதம் சரிவடைந்து, 18,11,703 லிருந்து, 15,83,276 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த இரு பிரிவுகளிலும், இதுவரை காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. முகமை நிறுவனங்களிடம், வாகனங்களின் தேக்கமும் அதிகரித்து உள்ளது.

பண்டிகை காலத்திற்கு முன், இரு சக்கர வாகனங்களின் தேக்க காலம், 60 நாட்களாகவும், பயணியர் வாகனங்களின் தேக்க காலம், 50 நாட்கள் என்ற அளவிலும் இருந்தது.இது, பண்டிகைக்கு பின், முறையே, 50 மற்றும் 45 நாட்களாக குறைந்துள்ள போதிலும், அது, இயல்பான தேக்க நிலையை விட அதிகம்என்பது குறிப்பிடத்தக்கது. வாகன விற்பனையில், வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பங்கு முக்கியமானதாக உள்ளது. இந்நிறுவனங்கள் தரும் கடன் வசதியால், பெரும்பான்மை வாகனங்கள் விற்பனையாகின்றன.

தற்போது, வங்கி சாரா நிதி நிறுவனங்கள், பணப்புழக்க நெருக்கடியை சந்தித்துள்ளன. இதன் காரணமாக, அவை, வாகன கடன் விண்ணப்பங்களை விரைவாக பரிசீலனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.நடவடிக்கைமத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் துறையில், பணப்புழக்கத்தை சீர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேசமயம், இந்தாண்டு பண்டிகை காலத்தில், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் விற்பனை, முறையே, 10 மற்றும் 16 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. இந்தாண்டு, ஏப்., 1 முதல், நவ., 20 வரை, ஒட்டுமொத்த வாகனப் பதிவு, 6.5 சதவீதம் உயர்ந்து, 1,19,89,705 ஆக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில், 1,12,54,305 ஆக இருந்தது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பல காரணங்கள் :
இந்தாண்டு பண்டிகை காலத்தில், இரு சக்கர வாகனங்கள் மற்றும் பயணியர் கார்கள் விற்பனை குறைந்துள்ளது. சமீப ஆண்டுகளில், இது போன்றதொரு மந்தமான பண்டிகை காலத்தை, வாகனத் துறை கண்டதில்லை.இதற்கு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, புதிய விதிமுறைப்படி உயர்ந்துள்ள காப்பீட்டு கட்டணம், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பண நெருக்கடி என, பல காரணங்களை கூறலாம். இதனால் பலர், வாகனம் வாங்கும் முடிவை தள்ளிப் போட்டுள்ளனர்.

-ஆஷிஷ் ஹர்ஷராஜ் கலே, தலைவர், வாகன முகமை நிறுவனங்கள் கூட்டமைப்பு

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)