பதிவு செய்த நாள்
27 நவ2018
07:07
சென்னை : இந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் ‘டெக்ஸ் வேலி’ இணைந்து நடத்தும், ‘வீவ்ஸ்’ என்ற தென் மாநில ஜவுளி கண்காட்சி, டிச., 5 முதல், 8ம் தேதி வரை ஈரோட்டில் நடைபெறுகிறது.
இந்த கண்காட்சியில், 800 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்ப்பதாக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.இது குறித்து, இந்திய தொழில் வர்த்தக சபையின் தமிழக தலைவர், எம்.பொன்னுசாமி, துணைத் தலைவர், எஸ்.சந்திரமோகன் மற்றும் டெக்ஸ் வேலி செயல் இயக்குனர், டி.பி.குமார், சென்னையில் நேற்று அளித்த பேட்டி:இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் டெக்ஸ் வேலி இணைந்து, வீவ்ஸ் என்ற தென் மாநில ஜவுளி கண்காட்சியை, டிச., 5 முதல், 8ம் தேதி வரை, ஈரோடில் நடத்துகின்றன.
விசைத்தறி மற்றும் கைத்தறி துறையை மேம்படுத்தும் நோக்கில், முதல் முறையாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.இதில், 250க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. துணிகள், ஆடைகள், காதி, கைத்தறிகள், மெத்தை விரிப்புகள், ஜவுளி உற்பத்தி தொடர்பான இயந்திரங்கள், உதிரி பாகங்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.
வியட்னாம், வங்கதேசம், தென் ஆப்ரிக்கா, மியான்மர் உட்பட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, 6,000க்கும் மேற்பட்ட துறை சார்ந்த பிரதிநிதிகள் கண்காட்சியில் பங்கேற்கின்றனர்.கைத்தறி மற்றும் விசைத்தறியில், தமிழகத்தின் வளம் என்பதை எடுத்துக்காட்ட, இந்த கண்காட்சி மிகச் சிறந்த தளமாக இருக்கும். உள்ளூர் நெசவாளர்கள் தங்களது தயாரிப்பை, ஏற்றுமதி செய்ய சிறந்த வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில், 800 கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம் நடைபெறும் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|