பதிவு செய்த நாள்
30 நவ2018
23:53
புதுடில்லி : நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டின், ஜூலை –செப்., வரையிலான இரண்டாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.1 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
இது, ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 8.2 சதவீதமாக இருந்தது.ராய்ட்டர்ஸ், புளும்பெர்க் நிறுவனங்கள், இரண்டாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, முறையே, 7.4 சதவீதம் மற்றும், 7.5 சதவீதமாக இருக்கும் என, தெரிவித்திருந்தன.
இந்த கணிப்பு தவறிய போதிலும், இதே காலத்தில் சீனாவின், 6.5 சதவீத வளர்ச்சியை ஒப்பிடுகையில், இந்தியா, 0.4 சதவீதம் அதிக வளர்ச்சியை கண்டுள்ளது. அத்துடன், வளரும் நாடுகளில், அதிவேக பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் நாடு என்ற சிறப்பையும் தக்க வைத்துள்ளது.
கடந்த நிதியாண்டின், இரண்டாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6.3 சதவீதமாக இருந்தது.தயாரிப்புகடந்த, ஜூலை – செப்., காலாண்டில், சுரங்கத் துறை வளர்ச்சி, 2.4 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில்,6.9 சதவீதமாக இருந்தது.
இதே காலத்தில், தயாரிப்பு துறை வளர்ச்சி, 7.1 சதவீதத்தில் இருந்து, 7.4 சதவீதமாக அதிகரித்து உள்ளது. கட்டுமானத் துறையின் வளர்ச்சி, 3.1 சதவீதத்தில் இருந்து, 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.வேளாண் துறையின் வளர்ச்சி, 2.6 சதவீதத்தில் இருந்து, 3.8 சதவீதமாக முன்னேற்றம் கண்டுள்ளது. இவ்வாறு, மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய 8 துறைகள் :
கடந்த அக்டோபரில், நிலக்கரி, சிமென்ட், மின்சாரம், உருக்கு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் உள்ளிட்ட, எட்டு துறைகளின் வளர்ச்சி, 4.8 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, அக்டோபரில், 5 சதவீதமாக இருந்தது. கச்சா எண்ணெய், உரம், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் உற்பத்தி வளர்ச்சியில் ஏற்பட்ட பின்னடைவால், ஒட்டுமொத்த துறைகளின் வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டுள்ளது.
அதேசமயம், ஏப்., – அக்., வரையிலான ஏழு மாதங்களில், முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி, 5.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில், 3.5 சதவீதமாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|