பதிவு செய்த நாள்
02 டிச2018
23:55
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்
விலையில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதிகப்படியான சரிவு
நிகழ்ந்தது. 2011-ம் ஆண்டுக்கு பின் ஏற்பட்ட சரிவு
இதுவேயாகும்.அக்டோபர் மாதத்தில், 1 பேரல் கச்சா எண்ணெய் விலை, 76
அமெரிக்க டாலர்கள். தற்போது, 26 டாலர்கள் குறைந்து, 1 பேரல் விலை, 50
அமெரிக்க டாலர் என்ற நிலையில் உள்ளது.
இந்த ஆண்டின் ஜனவரி
மாதம் முதல், செப்டம்பர் மாதம் வரை விலை உயர்வு கண்ட கச்சா எண்ணெய்,
அமெரிக்காவில் ஏற்பட்ட அதிக அளவிலான உற்பத்தி மற்றும் இருப்பு
காரணமாக விலை சரிந்தது.மேலும், ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா கொண்டு
வந்துள்ள பொருளாதாரத் தடையால், சந்தையில் தட்டுப்பாடு நிலவும்
என்ற கருத்தில் முன்பு விலையேற்றம் காணப்பட்டது.ஆனால், ஈரானிடம்
இருந்து இறக்குமதி செய்ய, இந்தியா உட்பட சில முக்கியமான
நாடுகளுக்கு, அமெரிக்கா விதிவிலக்கு அளித்தது. அதன் காரணமாக, முன்பு
நிலவி வந்த அசாதாரண சூழ்நிலை மாறியது. இது, எண்ணெய் விலை சரிவுக்கு
காரணமாக அமைந்தது.
தற்போது, கச்சா எண்ணெய்
உற்பத்தியில், அமெரிக்கா முதலிடத்திலும், சவுதி அரேபியா இரண்டாம்
இடத்திலும், ரஷ்யா மூன்றாம் இடத்திலும் உள்ளன.அமெரிக்காவின்,
ஷெல் கச்சா எண்ணெய் உற்பத்தி, தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இயங்கி வரும் ஆழ்குழாய் கிணறுகளின் எண்ணிக்கையும், கடந்த மூன்று
ஆண்டுகளில் அதிகரித்து, தற்போது, 175 எண்ணெய் குழாய் கிணறுகள்
இயங்கி வருகின்றன.
தினசரி எண்ணெய் உற்பத்தி, 1 லட்சம் பேரல்கள்
அதிகரித்து, மொத்த உற்பத்தி, தினசரி, 11.4 மில்லியன் பேரல்கள் என்ற
நிலையில் உற்பத்தி பெருகி வருகிறது. அதிகரித்து வரும் உற்பத்தி
மற்றும் தேவை குறைவால் ஏற்பட்டுள்ள இருப்பு அதிகரிப்பு
போன்றவற்றால் விலை ஏற்றம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, விலை
சரிந்து வர்த்தகமாகி வருகிறது.
கடந்த வார இறுதியில், ‘ஜி –
-20’ மாநாடு நடைபெற்றது. இதில், எண்ணெய் உற்பத்தியில் உள்ள மிகப்
பெரிய நாடுகளும் பங்கேற்றன. மேலும், இந்த வாரம் வியாழன் அன்று, ஒபெக்
கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் உற்பத்தியை
குறைத்து, விலை சரிவை கட்டுக்குள் கொண்டு வருவது என
தீர்மானிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் வெள்ளி
ஏப்ரல்
மாதம் முதல், செப்டம்பர் மாதம் வரை, சரிவில் இருந்து வந்த தங்கம்
மற்றும் வெள்ளி விலை, கடந்த இரு மாதங்களாக உயர்வில் வர்த்தகமாகி
வருவதுகுறிப்பிடத்தக்கது.பிளாட்டினம் விலை வரலாறு காணாத உச்சத்தை
எட்டியது. பிளாட்டினம் ஆபரண தேவையைக் காட்டி லும் அதிக அளவில்
தொழிற்சாலைகளில் உபயோகிக்கப்படுகிறது. குறிப்பாக, வாகனங்களில்
ஏற்படும் அதிகப்படியான புகையை கட்டுப்படுத்த
உபயோகிக்கப்படுகிறது. 2017 ஜனவரிக்கு பின், மாத அளவிலான உச்ச விலை
ஏற்றம், நவம்பர் மாதத்தில் ஏற்பட்டது.
ஜி – -20
மாநாட்டில், அமெரிக்க அதிபரும், சீன அதிபரும் பேச்சு நடத்தி,
வர்த்தக மோதலுக்கு ஒரு முடிவை ஏற்படுத்துவர் என்றும், சுமுக நிலை
ஏற்படக்கூடும் என்ற கண்ணோட்டத்திலும், சந்தையில் அமெரிக்க
நாணயத்தின் மதிப்பு உயர்ந்தது. அதன் காரணமாக, வார இறுதியில்,
சிறிதளவு தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை
சரிந்தது.ஜி.எப்.எம்.எஸ்., நிறுவனம் நடத்திய, உலக தங்க உற்பத்தி
கருத்துக்கணிப்பு நிலவரத்தில், சீனா தொடர்ந்து முதலிடம் வகித்து
வருகிறது. சீனாவின்மொத்த உற்பத்தி, 426 டன். இரண்டாவதாக ஆஸ்திரேலியா,
275 டன்; மூன்றாவதாக ரஷ்யா, 270 டன் ஆகும்.
உலக நாடுகளின்
மொத்த உற்பத்தியானது, 2017ல், 3,247 டன்னாக இருந்தது. இது, முந்தைய,
2016ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 5 டன் குறைவாகும்.டாலருக்கு
நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த வாரம் வரலாறு காணாத வீழ்ச்சி
அடைந்தது. ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு, 70 ரூபாயை கடந்து வர்த்தகம்
ஆகிறது.
இதன் காரணமாக, சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை
குறைந்தாலும், உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை குறையாமல்,
சிறிதளவு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.கடந்த சில மாதங்களாகவே
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறைந்தும், நம் நாட்டு
நாணயத்தின் மதிப்பு குறைவால், உள்நாட்டு சந்தையில் விலை குறையாமல்
இருந்து வருகிறது.கடந்த மூன்று மாதங்களாக, சர்வதேச சந்தையில்,
தங்கம் விலை, 1 அவுன்ஸ், 1,200 டாலர் என்ற மிகப் பெரிய சப்போர்ட்டுடன்
வர்த்தகம் ஆகிறது.
செம்பு
சமீபகாலமாக செம்பு
வர்த்தகம், தொடர்ந்து விலை சரிவில் நடந்த நிலையில், கடந்த நான்கு
வாரங்களாக, சீரான நிலையில் வர்த்தகமாகி வருகிறது.அமெரிக்கா
மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போர் மற்றும்
சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை,
செம்பு விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பொருளாதார
காரணிகளின் முன்னேற்றம், பொருளாதார வளர்ச்சி, கச்சா எண்ணெய்
விலையில் சரிவு போன்றவை காரணமாக, அடுத்த மாதம் நடைபெற உள்ள, அமெரிக்க
மத்திய வங்கி கூட்டத்தில், வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்ற
கருத்து நிலவுவதால், அமெரிக்க டாலர் குறியீடு உயர்ந்தது. இது, செம்பு
விலையில் பாதிப்பை ஏற்படுத்தியது.
கடந்த சில மாதங்களாக, அமெரிக்கா
மற்றும் சீனா ஆகியவற்றுக்கு இடையே நடந்து வரும் வர்த்தக மோதல்
காரணமாக, சீனாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், தொழிற்சாலை முதலீட்டு பொருட்களின் தேவை குறைந்து, அதன்
காரணமாகவும் செம்பு விலை சரிந்து வருகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|