பதிவு செய்த நாள்
04 டிச2018
04:03
துபாய்:கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளை உள்ளடக்கிய, 'ஒபெக்' கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக, வளைகுடாவைச் சேர்ந்த, கத்தார் நாடு அறிவித்துள்ளது.ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, இரு மாதங்களில், 26 டாலருக்கும் அதிகமாக குறைந்துள்ளது. இந்த சரிவை தடுக்க, 6ம் தேதி, வியன்னாவில் நடைபெறும், ஒபெக் மாநாட்டில், கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்நிலையில், ஒபெக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக, கத்தார் அறிவித்துள்ளது.கத்தார், தினமும், 48 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்கிறது. இதை, 65 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும், திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதியை, ஆண்டுக்கு, 7.70 கோடி டன்னில் இருந்து, 11 கோடி டன்னாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
உள்நாட்டு பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், சர்வதேச நாடுகளிடம், நம்பகத்தன்மையை அதிகரிக்கவும், ஒபெக்கில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக, கத்தார் அறிவித்து உள்ளது.கடந்த, 1960ல், ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, வெனிசுலா ஆகிய ஐந்து நாடுகள், ஒபெக் அமைப்பை ஏற்படுத்தின. அதன் பின், கத்தார், இந்தோனேஷியா, லிபியா உள்ளிட்ட, ஒன்பது நாடுகள், இணைந்தன.முதன் முறையாக, ஒபெக் கூட்டமைப்பில், தற்போது, கத்தார் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|