பதிவு செய்த நாள்
14 டிச2018
23:36
ஐதராபாத்:அதானி குழுமம், இஸ்ரேலின், ‘எல்பிட் சிஸ்டம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, ஐதராபாதில், ‘டிரோன்’ எனப்படும், ஆளில்லா குட்டி விமான தயாரிப்பில் இறங்கியுள்ளது.இதன் மூலம், இந்தியாவில் டிரோன் தயாரிப்பில் இறங்கியுள்ள, முதல் தனியார் நிறுவனம் என்ற சிறப்பை, அதானி பெற்றுள்ளது.
ஐதராபாதின் புறநகர் பகுதியில் உள்ள, அதானி விண்வெளி பூங்காவில், 50 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைந்துள்ள தொழிற்சாலையை, தெலுங்கானா உள்ளாட்சி துறை அமைச்சர், முகமது மகமூத் அலி துவக்கி வைத்தார்.இங்கு, ‘ஹெர்ம்ஸ் 900, ஹெர்ம்ஸ் 480’ ரக, ஆளில்லா விமான பாகங்கள் தயாரிக்கப்பட்டு, ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.
அத்துடன், உதிரிபாகங்களை ஒன்றிணைத்து, உள்நாட்டு விற்பனைக்கான டிரோன்கள் தயாரிக்கப்படும் என, அதானி குழுமம் தெரிவித்துள்ளது.சுரங்கம், கட்டுமானம், திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், ஆளில்லா விமானங்களின் பயன்பாடு பெருகி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|