வளர்ச்சி பாதையில் ஆயத்த ஆடை ஏற்றுமதி: ஜி.எஸ்.டி.,க்கு பின் ஏறுமுகம் வளர்ச்சி பாதையில் ஆயத்த ஆடை ஏற்றுமதி: ஜி.எஸ்.டி.,க்கு பின் ஏறுமுகம் ... இணக்­கத்­தின் இலக்­க­ணம் சக்­தி­காந்த தாஸ் இணக்­கத்­தின் இலக்­க­ணம் சக்­தி­காந்த தாஸ் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்திக் கொள்வதில் கவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2018
07:22

கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருப்பது, வங்கிகளிடம் இருந்து கடன் பெறுவதை பாதிக்கும் என்பதால், கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

வங்கி கடன் பெறுவதில், ‘கிரெடிட் ஸ்கோர்’ எனப்படும், கடன் தகுதி மதிப்பெண் முக்கியஅங்கம் வகிக்கிறது. கிரெடிட் ஸ்கோர்என்பது, வங்கிகளிடம் பெற்ற கடனை திருப்பிச்செலுத்தும் ஒருவரது ஆற்றலை குறிக்கும் நிதி அடையாளம் போன்றது.வங்கிகள் கடன் வழங்கும் போது, விண்ணப்பிப்பவரின் வருமானம் உள்ளிட்ட அம்சங்களோடு கிரெடிட் ஸ்கோரையும் முக்கியமாக பரிசீலிக்கின்றன. கடனுக்கான தவணையை திரும்பிச்செலுத்தும் தன்மைஉள்ளிட்ட கடன் வரலாறு அடிப்படையில், கிரெடிட் ஸ்கோர் கணக்கிடப்படுகிறது.

பொதுவாக, கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால், சிக்கல் இல்லாமல் கடன் கிடைக்கலாம். அதே நேரத்தில், கடனுக்கான விண்ணப்பம்நிராகரிக்கப்படுவதற்கு குறைந்த கிரெடிட் ஸ்கோர் முக்கிய காரணமாக இருக்கலாம். இது போன்ற நேரங்களில், முதலில் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

கடன் தவணைகிரெடிட் ஸ்கோரை மேம்படுத்திக்கொள்வதற்கான முதல் வழி,ஒருவர் தன் கிரெடிட் ஸ்கோரை தெரிந்து கொண்டு, அதில் செலுத்தப்படாத கடன் தவணை குறிப்பிடப்பட்டிருந்தால், அவற்றை செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.தொடர்ந்து, சீராக கடன்தவணையை செலுத்தி வந்தால், கிரெடிட் ஸ்கோர் மேம்படும்.கிரெடிட் கார்டு வைத்திருப்பவர் எனில் பில் தொகையை உரியநேரத்தில் செலுத்த வேண்டும்.ஒன்றுக்கு மேற்பட்ட கடன்பெற்றிருந்தால், அதிக வட்டி உள்ள கடனை அடைப்பதில் முதலில்கவனம் செலுத்த வேண்டும். கடன் தவணை மற்றும் பில் தொகையை தாமதம் செய்யாமல், குறித்த காலத்தில் செலுத்துவது, கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தும்.

அடுத்ததாக, கடன்களின் தன்மையில் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக வீட்டுக்கடன் போன்ற, ஈடு செய்யப்பட்ட கடன்களை விட, தனிநபர் கடன் போன்ற ஈடு செய்யப்படாத கடன்கள் குறைவாக மதிப்பிடப்படுகின்றன. எனவே, ஈடு செய்யப்படாத கடன்கள் குறைவாக இருப்பது நல்லது.மேலும், அதிக அளவில் கடன் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். மாத வருமானத்தில், 40 சதவீதத்திற்கு மேல் கடன் தவணையாக செல்லாமல் இருப்பது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களும், முழு கடன் அளவையும் பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது.கடன் கோரிக்கைகள்கடன்கள் மட்டும் அல்லாமல், கடன் பெறுவது தொடர்பான கோரிக்கைகளும், கிரெடிட் ஸ்கோருக்காக கவனத்தில் கொள்ளப்படுகின்றன. உதாரணமாக, ஒருவர், கடன் பெறுவதுபற்றி பல வங்கிகளில் விசாரித்திருந்தால், அவர் அதிக கடன் தேவையில் இருப்பதாக கருதப்படும்.இது, மதிப்பெண்ணை குறைக்கும். கடன் விபரங்களை தெரிந்து கொள்ள விரும்பினால், இணையதளம் மூலம் வங்கிகள் வழங்கும் கடன் விபரங்களை ஒப்பிட்டுப்பார்க்கலாம்.

ஒரு சிலருக்கு கிரெடிட் ஸ்கோரில்கடன் வரலாறு இல்லை என்ற, தகவல்வரலாம். வங்கி கடன் பெற்றிராத நிலையில், கடன் வரலாறு இருக்க வாய்ப்பில்லை. இவர்கள் வைப்பு நிதியுடன் இணைக்கப்பட்ட செக்யூர்டு கிரெடிட் கார்டு பெற்று, கவனமாக பயன்படுத்துவதன் மூலம், கிரெடிட் ஸ்கோரை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

சிறிய அளவிலான நுகர்வோர் கடன் பெற்று, அவற்றை உரிய நேரத்தில் அடைப்பதன் மூலம், கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்திக்கொள்ளலாம். ஏற்கனவே கடன் பெற்றவர்கள், தங்கள் கிரெடிட் அறிக்கையில் எல்லா தகவல்களும் சரியாகஇருப்பதை, உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)