பதிவு செய்த நாள்
20 டிச2018
10:34
மும்பை : அமெரிக்க பெடரல் வங்கி, இந்த ஆண்டில் 4வது முறையாக வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளன. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் நெருக்கடி நிலை ஏற்பட்டதன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (டிச.,20, காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 166.63 புள்ளிகள் சரிந்து 36,317.70 புள்ளிகளாகவும், நிப்டி 56.70 புள்ளிகள் சரிந்து 10,910.60 புள்ளிகளாகவும் உள்ளன. அமெரிக்கா மற்றும் பிற ஆசிய சந்தைகள் சரிவுடன் காணப்படுவதும் இந்திய பங்குச்சந்தைகளின் சரிவிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதும் பங்குச்சந்தைகளின் சரிவிற்கு மற்றொரு காரணமாக கூறப்படுகிறது.
வேதாந்தா, என்டிபிசி, பார்தி ஏர்டெல், எச்டிஎப்சி, விப்ரோ, பவர்கிரிட், இன்போசிஸ், மாருதி, அதானி போர்ட்ஸ் மற்றும் கோவாக் வங்கி பங்குகள் 2 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்துள்ளன. ஏசியன் பெயின்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் 2 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|