பதிவு செய்த நாள்
20 டிச2018
23:23
புதுடில்லி : ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், ஜனவரி முதல், அதன் வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால், ஜனவரி மாதம் முதல், அதன் வாகனங்களின் விலையை அதிகரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு, 30 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம், 3.89 லட்சம் ரூபாய் முதல், 26.84 லட்சம் ரூபாய் வரையிலான, ஷோரூம் விலை கொண்ட வாகனங்களை, விற்பனை செய்து வருகிறது. கடந்த வாரம், டாடா மோட்டார்ஸ், போர்டு இந்தியா மற்றும் நிஸான் இந்தியா ஆகிய நிறுவனங்கள், விலை அதிகரிப்பை அறிவித்தன.
மாருதி சுசூகி, டொயோட்டா கிர்லோஸ்கர், பி.எம்.டபிள்யு., ரெனோ மற்றும் இசுசூ ஆகிய நிறுவனங்களும், ஜனவரி மாதம் முதல் விலையை அதிகரிக்க இருப்பதாக, ஏற்கனவே அறிவித்துள்ளன, என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|