பதிவு செய்த நாள்
20 டிச2018
23:25
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, ஓ.என்.ஜி.சி., நிறுவனம், 4,022 கோடி ரூபாய் மதிப்பிலான, 25.29 கோடி பங்குகளை வாங்க உள்ளது.
இத்திட்டத்திற்கு, நேற்று நடைபெற்ற, இந்நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிறுவனத்தில், மத்திய அரசு, 65.64 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. அதில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை, ஓ.என்.ஜி.சி.,க்கு வழங்கி, 2,640 கோடி ரூபாய் திரட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில், பொது துறை நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க பங்கு விற்பனை மூலம், 80 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், இந்த இலக்கை எட்ட முடியாத சூழல் நிலவுகிறது. அதனால், பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்தை, மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ள உள்ளது.
இம்மாத துவக்கத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், 4,435 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இது தவிர, கோல் இந்தியா, என்.எல்.சி., உள்ளிட்ட அரை டஜன் நிறுவனங்களும், பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்தை அறிவித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|