நிறுவன இணைப்பு, கையகப்படுத்தலில் சாதனை; இந்தாண்டு ரூ.7 லட்சம் கோடி ஒப்பந்தங்கள் கையெழுத்துநிறுவன இணைப்பு, கையகப்படுத்தலில் சாதனை; இந்தாண்டு ரூ.7 லட்சம் கோடி ... ...  அப்படியா  அப்படியா ...
திவாலானது ஜியோனி மொபைல் நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 டிச
2018
13:17

பிஜிங் : பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான ஜியோனி, உரிமையாளரின் சூதாட்ட மோகத்தால் திவாலாகி உள்ளது.

சீனாவின் பிரபல மொபைல் நிறுவனம் ஜியோனி. குறைந்த விலை உட்பட ஏராளமான ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகம் செய்து, ஆசிய சந்தைகளில் குறிப்பிடத்தக்க நிறுவனமாக திகழ்ந்தது. சில ஆண்டுகளாக இந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி, திவாலாகி உள்ளது. ஆகஸ்ட் 2018 வரை அந்நிறுவனத்திற்கு 20.2 பில்லியன் யுவான் கடன் இருப்பதாக சீன பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜியோனி நிறுவனத்தின் நிறுவனர் லியூ லிராங் கூறுகையில் ஜியோனி நிறுவனம், 2013-15ம் ஆண்டு காலக்கட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 14.4 மில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்தாக தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் ஸ்பெயின் சென்றிருந்த லியூ, அங்கு சூதாட்டத்தில் மட்டும் 10 பில்லியன் யுவானை இழந்ததாக கூறப்படுகிறது. இதனால் சப்ளையர்களுக்கு தர வேண்டிய தொகை கொடுக்காமல் அப்படியே நின்று போய்விட்டது. கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களுக்கு தர வேண்டிய பணத்தை கேட்டு ஜியோனி நிறுவனத்தை முறையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜியோனி நிறுவனம் திவாலானதாக அறிவிக்க கோரி அங்குள்ள ஷென்ஷென் கோர்ட்டில் முறையிடப்பட்டது. கோர்ட்டும் அதை ஏற்றுக்கொண்டுள்ளது.

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் ஜியோனி நிறுவனம், இந்தியாவில் ரூ.650 கோடி முதலீடு செய்ய இருப்பதாக இந்தாண்டில் செய்திகள் வெளியாகின. அப்படியான சூழலில், அந்நிறுவனம் திவாலாவது இந்திய சந்தைகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

லியூ லிராங்கின் சூதாட்ட மோகத்தால் ஜியோனி நிறுவனமே திவலாகிவிட்டதாக சீனாவில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)