பதிவு செய்த நாள்
27 டிச2018
23:24
ரிசர்வ் வங்கியின் பொருளாதார மூலதன கட்டமைப்பை ஆய்வு செய்ய, பிமல் ஜலான் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு, 2019, மார்ச்சுக்குள், அறிக்கையை வழங்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு, 2018–-19ம் நிதியாண்டின் ஏப்., – நவ., வரையிலான எட்டு மாதங்களில், நாட்டின் நிதிப்பற்றாக்குறை, மத்திய அரசின் பட்ஜெட் இலக்கை விஞ்சி, 7.17 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில், ஆப்பிள் ஐபோன் சாதனங்களின் அசெம்பிளிங் பணி துவங்க உள்ளது.
உருக்கு இறக்குமதி வரி குறைப்பு தொடர்பாக, அமெரிக்கா உடனான பேச்சு தோல்வி அடைந்ததால், அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் குறிப்பிட்ட பொருட்களுக்கு வரியை உயர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
விவசாயிகள், சாகுபடி குறித்து முடிவெடுக்க வசதியாக, முக்கிய உணவு தானியங்கள், வெங்காயம் உள்ளிட்ட விளை பொருட்களின் விலை, தேவைப்பாடு விபரங்களை, வரும் கரீப் பருவம் முதல் வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பொதுத் துறை நிறுவனங்கள், 2017- – 18ம் நிதியாண்டில், பல்வேறு வரிகள், டிவிடெண்ட் வாயிலாக மத்திய அரசுக்கு செலுத்திய தொகை, 3.60 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 3.50 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|