பதிவு செய்த நாள்
27 டிச2018
23:26
திருப்பூர் : வரும், 2022ம் ஆண்டுக்குள், ஆடை உற்பத்தி துறையில், 20 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும், ஆயத்த ஆடை, வீட்டு உபயோக ஜவுளித் துறைக்கான திறன் மேம்பாட்டு கவுன்சில் எனும், ஏ.எம்.எச்.எஸ்.எஸ்.சி., சார்பில், சிறப்பு திறன் பயிற்சி மையம், திருப்பூரில் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. 2 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையத்தில், தொழில் சார்ந்த மிஷின்கள், ஆடை வடிவமைப்புக்கு உதவும், ‘கேட்’ மென்பொருள், பேட்டன் மேக்கிங், ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதை, மத்திய திறன் மேம்பாட்டுத் துறை செயலர், கிருஷ்ணன், திறந்து வைத்து பேசியதாவது: ஆயத்த ஆடைத் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. ஆடை உற்பத்தி துறையில், திறன் மிக்க தொழிலாளர்களை உருவாக்குவது அவசியம். ஆடை உற்பத்தி நிறுவனங்களில், சூப்பர்வைசர், நிர்வாக இடங்களில் பணிபுரிவோருக்கு, இம்மையத்தில் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி அளிப்பதால், நிறுவனங்களின் உற்பத்தி திறன் அதிகரிக்கும்; தரம் உறுதி செய்யப்படும். திருப்பூரை தொடர்ந்து, விரைவில் டில்லியில் சிறப்பு பயிற்சி மையம் திறக்கப்படுகிறது.கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆறு லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்குள், நாடு முழுவதும், 20 லட்சம் பேருக்கு பயிற்சி அளித்து, ஆடை உற்பத்தி துறைக்கு திறன் மிக்க தொழிலாளர்களை வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|