பதிவு செய்த நாள்
30 டிச2018
23:51
பெரும்பாலான இந்தியர்கள், வாழ்க்கையின் முக்கிய இலக்குகளை திட்டமிடுவதற்கு அதிகம் நாடும் நிதி சாதனங்களில் ஒன்றாக ஆயுள் காப்பீடு இருப்பது தெரிய வந்துள்ளது.
‘எக்ஸைடு லைப்’ நிறுவனம், நடத்திய, ‘2018 மணி ஹாபிட்ஸ்’ அறிக்கை, இந்தியர்களின் வாழ்க்கை இலக்குகளில் ஆயுள் காப்பீடு முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கிறது. எனினும், இந்தியர்களில், 30 சதவீதத்தினர், தங்களுக்கு தேவையான காப்பீட்டு அளவை அறிந்து இருக்கவில்லை என்றும் கூறுகிறது.
மெட்ரோ நகரங்கள் உள்ளிட்ட, 12 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த டிஜிட்டல் ஆய்வு, இந்தியர்கள் தங்கள் நிதி செயல்பாடுகளை குறித்து வைப்பதில் கவனம் செலுத்துவதில்லை என, தெரிவிக்கிறது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில், 37 சதவீதத்தினர் தங்கள் நிதி செயல்பாடுகள் குறித்து குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை என, கூறியுள்ளனர்.
பங்குச்சந்தை:
பங்குச்சந்தை கடந்த வாரம் ஏறுமுகத்துடன் முடிவடைந்தன. வார இறுதி வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 269 புள்ளிகள் உயர்ந்து, 36,077 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 80 புள்ளிகள் உயர்ந்து, 10,860 புள்ளியாக இருந்தது. நிகர அடிப்படையிலும் ஏறுமுகம் உண்டானது. வங்கித்துறை பங்குகள் உயர்ந்தன.
சர்வதேச சந்தையில் நிலவிய சாதகமான போக்கு மற்றும் உள்நாட்டு பொருளாதார நிலை தொடர்பான அறிகுறிகள் தாக்கம் செலுத்தின. இந்திய ரூபாய் மதிப்பின் போக்கும் தாக்கம் செலுத்தியது. வரும் நாட்களில், சர்வதேச சந்தையின் போக்கு தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏறுமுகம் கண்ட பங்குகள்
1. சன் பார்மா- 424.60 ( 2.98)2. வேதாந்தா- 199.40 (1.76)3. எச்.டி.எப்.சி – 1,980.10 ( 1.72)-இறங்குமுகம் கண்ட பங்குகள்1. டி.சி.எஸ் – 1,895.80 (0.71)2. பஜாஜ் ஆட்டோ- 2,723.30 (0.47)3. ஏசியன் பெயிண்ட்ஸ்- 1,365.35 (0.12)
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|