பதிவு செய்த நாள்
04 ஜன2019
00:01
புதுடில்லி:–காபி ஏற்றுமதி, கடந்த ஆண்டில், 7.36 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது. இது குறித்து,காபி வாரியம் கூறியுள்ளதாவது:கடந்த ஆண்டில், 3.50 லட்சம் டன் காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.இது, அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது,7.36 சதவீதம் குறைவாகும்.
2017ல், 3.78 லட்சம் டன் ஏற்றுமதி ஆனது.ரோபஸ்ட்டா மற்றும் இன்ஸ்டன்ட் காபி வகைகளின் ஏற்றுமதி குறைந்ததே இதற்கு காரணம். ரோபஸ்ட்டா ஏற்றுமதி மட்டும், 17.65 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. 1 லட்சத்து, 79 ஆயிரத்து, 903 டன் ரோபஸ்ட்டா ஏற்றுமதி ஆகியுள்ளது. இதுவே, அதற்கு முந்தைய ஆண்டான, 2017ல், 2 லட்சத்து, 18 ஆயிரத்து, 463 டன் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
இருப்பினும், அராபிக்கா காபி வகையின் ஏற்றுமதி சிறிது அதிகரித்துள்ளது. 2017ம் ஆண்டில், 47 ஆயிரத்து, 314 டன்னாக இருந்த நிலையில், கடந்த ஆண்டில் இவ்வகை காபி ஏற்றுமதி,
53 ,302 டன்னாக அதிகரித்து உள்ளது.பண மதிப்பீட்டில் பார்க்கும்போது, 2017ம் ஆண்டில், 6,091 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி ஆனது. கடந்த ஆண்டு, 5,770 கோடி ரூபாய் அளவுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில், இத்தாலி நாட்டுக்கு, அதிக அளவில் காபி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அந் நாட்டுக்கு, 76 ஆயிரத்து, 437 டன் காபி ஏற்றுமதியானது.இத்தாலியை அடுத்து ஜெர்மனிக்கு, 28 ஆயிரத்து, 582 டன்னும்; ரஷ்யாவுக்கு, 21 ஆயிரத்து, 397 டன்னும் ஏற்றுமதி ஆகியுள்ளன.காபி உற்பத்தியை பொறுத்தவரை, ஆசியாவில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|