பதிவு செய்த நாள்
04 ஜன2019
00:04
புதுடில்லி:இந்தியாவில், தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை, கடந்த அக்டோபர் மாதத்தில், 119.20 கோடியாக உயர்ந்துள்ளது.
இது குறித்து, இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான, டிராய் அறிவித்து உள்ளதாவது:
கடந்த அக்டோபர் மாதத்தில், தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை, 119.20 கோடியாக அதிகரித்துள்ளது. இதுவே, அதற்கு முந்தைய மாதமான செப்டம்பரில், 119.14 கோடியாக இருந்தது.கடந்த அக்டோபரில், ரிலையன்ஸ் ஜியோ புதிதாக, ஒரு கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது.
ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் பின்தங்கிவிட்டன.ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல்., ஆகிய இரு நிறுவனங்கள், மொத்தம் ஒரு கோடியே, எட்டு லட்சம் மொபைல் போன் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளன. பி.எஸ்.என்.எல்., நிறுவனம், 3.66 லட்சம் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது.வோடபோன் ஐடியா, ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ், எம்.டி.என்.எல்., ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சேர்ந்து, மொத்தம் ஒரு கோடியே, ஒரு லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.
தொலைபேசி இணைப்புகளை பொறுத்தவரை, மொபைல் போன்களின் சந்தை பங்களிப்பு, 98 சதவீதமாக இருக்கிறது.இவ்வாறு டிராய் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|