பதிவு செய்த நாள்
05 ஜன2019
23:44
புதுடில்லி:மத்திய அரசு, 3பிராந்திய ஊரக வங்கிகளை, ஒரே வங்கியாக இணைத்துள்ளது.
இதன்படி, பஞ்சாப் கிராமின் பேங்க், மால்வா கிராமின் பேங்க், சட்லஜ் கிராமின் பேங்க் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.இந்த மூன்று வங்கிகள், ‘நபார்டு’ எனப்படும் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டுக்கான தேசிய வங்கி; பஞ்சாப் மாநில அரசு மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க்; ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் பஞ்சாப் அண்டு சிந்து பேங்க் ஆகியவற்றின் துணை வங்கிகள் ஆகும்.
மூன்று பிராந்திய ஊரக வங்கிகளை ஒன்றிணைக்கும் திட்டத்திற்கு, தாய் வங்கிகள் ஒப்புதல் அளித்துள்ளன.இதையடுத்து, மூன்று ஊரக வங்கிகளின் நலன் மற்றும் அவை சேவை அளிக்கும் பகுதிகளின் வளர்ச்சிக்காக, மத்திய அரசு, இணைப்பு நடவடிக்கையை மேற் கொண்டு உள்ளது.வங்கிகள் ஒன்றிணைப்பு, நடப்பு ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாக, மும்பை பங்குச் சந்தைக்கு, பஞ்சாப் அண்டு சிந்து பேங்க் தெரிவித்துள்ளது.நாட்டில், 53 பிராந்திய ஊரக வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|