பதிவு செய்த நாள்
22 ஜன2019
23:42
புதுடில்லி : அதிக மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு, இதுவரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதோர், கணக்கு தாக்கல் செய்ய, 21 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நேரடி வரிகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 2017- – 18ம் நிதியாண்டில், தனி நபர்கள் அதிக மதிப்பிலான பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கான வருமான வரி கணக்கை, அவர்கள், நடப்பு, 2018- – 19ம் வரி மதிப்பீட்டு ஆண்டிற்குள் தாக்கல் செய்ய வேண்டும்.அவ்வாறு செய்யாமல் உள்ளோரின் விபரங்கள், சேகரிக்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, 21 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள், வருமான வரி துறையிடம், கணக்கு விபரங்களை தாக்கல் செய்யவோ அல்லது விளக்கம் அளிக்கவோ வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால், வருமான வரி சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இது குறித்து மேலும் விபரங்களை, https://incometaxindiaefiling.gov.in. வலைதளத்தில் அறியலாம்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|