பதிவு செய்த நாள்
23 ஜன2019
23:30
புதுடில்லி : ஜி.எஸ்.டி., தொடர்பான புகார்களை விசாரிக்க, அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட உள்ளது.
தற்போது, ஜி.எஸ்.டி., குறித்த வழக்குகளை விசாரிக்க, மாநில அளவில், ஏ.ஏ.ஆர்., எனப்படும், மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் உள்ளன. ஜி.எஸ்.டி., வரி விதிப்பு தொடர்பாக, இந்த தீர்ப்பாயங்களின் முடிவு, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. இதனால் ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க, மத்தியில் பொதுவான மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க, ஜி.எஸ்.டி., கவுன்சில் முடிவு செய்தது.
இந்நிலையில், நேற்று டில்லியில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற, மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், ஏ.ஏ.ஏ.ஆர்., எனப்படும் மத்திய, ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க, ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதையடுத்து, ஜி.எஸ்.டி., சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, புதிய அமைப்பு விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும், ஜி.எஸ்.டி., தொடர்பான பிரச்னைகளுக்கு ஒரே அளவுகோல் அடிப்படையில், தீர்வு காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|