பதிவு செய்த நாள்
01 பிப்2019
06:13
புதுடில்லி: ஜி.எஸ்.டி., வருவாய், இரு மாதங்களுக்கு பின், ஜனவரியில், மீண்டும், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, நவம்பர், டிசம்பர் மாதங்களில், ஜி.எஸ்.டி., வசூல், முறையே, 89 ஆயிரத்து, 825 கோடி ரூபாய் மற்றும் 94 ஆயிரத்து, 725 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரலில், முதன் முறையாக, ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சத்து, 3 கோடி ரூபாயாக அதிகரித்தது. அதைத் தொடர்ந்து, அக்டோபரில், 1 லட்சத்து, 710 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்த வகையில், நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், மூன்றாவது முறையாக, ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டி உயர்ந்துள்ளது.
ஜி.எஸ்.டி., குழுவின் வரி குறைப்பு மற்றும் வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, வசூல் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரியில் வசூலிக்கப்பட்ட, ஜி.எஸ்.டி., குறித்த துல்லியமான புள்ளி விபரம், நாளை வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|