பதிவு செய்த நாள்
02 பிப்2019
23:24
புதுடில்லி:கடந்த ஜனவரியில், ஜி.எஸ்.டி., வருவாய், 1.02 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, மத்திய நிதியமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்தாண்டு ஜனவரியில், ஜி.எஸ்.டி., வசூல், 89 ஆயிரத்து, 825 கோடி ரூபாயாக இருந்தது. ஏப்ரலில், ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சத்து, 3 கோடி ரூபாயாக அதிகரித்தது.அதைத் தொடர்ந்து, அக்டோபரில், 1 லட்சத்து, 710 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்தவகையில், நடப்பு 2018- – 19ம் நிதியாண்டில், மூன்றாவது முறையாக, ஜி.எஸ்.டி., வசூல், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டி உயர்ந்துள்ளது.
மத்திய அரசு, ஐ.ஜி.எஸ்.டி., வருவாயில், சி.ஜி.எஸ்.டி., மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி.,க்கு முறையே, 18 ஆயிரத்து, 344 கோடி ரூபாய் மற்றும் 14 ஆயிரத்து, 677 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் நிலவரப்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு, சி.ஜி.எஸ்.டி., மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி., மூலம், முறையே, 36 ஆயிரத்து, 107 கோடி ரூபாய் மற்றும் 39 ஆயிரத்து, 503 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|