பதிவு செய்த நாள்
02 பிப்2019
23:34
நாமக்கல்:தமிழகம் மற்றும் கேரளாவில், முட்டை கொள்முதல் விலை, 425 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நேற்று நடந்தது. அதில், முட்டை உற்பத்தி, மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து, பண்ணையாளர்கள் விவாதித்தனர்.
விலையில் மாற்றம்
அதையடுத்து, 420 காசுகளாக விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 425 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை, (காசுகளில்) நிலவரம்:சென்னை, 430; ஐதராபாத், 395; விஜயவாடா, 395; பர்வாலா, 393; மும்பை, 450; மைசூர், 426, பெங்களூரு, 425; கோல்கட்டா 440; டில்லி, 412 என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், 1 கிலோ, 62 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த, முட்டைக்கோழி விலை, 3 ரூபாய் குறைந்து, கிலோ, 59 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது.பல்லடத்தில் நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில், கிலோ, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த கறிக்கோழி விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
அனுசரிப்பு
இது குறித்து, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு, நாமக்கல் மண்டலத் தலைவர் செல்வராஜ் வெளியிட்ட அறிக்கை:இனிமேல், வெயில் காலம் முடியும் வரை, நாமக்கல் முட்டை விலை, ஐதராபாத் முட்டை விலையை விட, ஒரு முட்டைக்கு, 15 காசு அதிகம் இருக்கும்.
வெயில் காலம் முடியும் வரை, நாமக்கல் மண்டலத்தின் கொள்முதல் விலையை பார்த்து தான், ஐதராபாத் மற்றும் மற்ற மண்டலங்களும், விலை நிர்ணயம் செய்வர். அதனால், நாம் ஐதராபாத் மற்றும் பர்வாலா விலையையோ பொருட்படுத்த வேண்டாம்.நாமக்கல் மண்டலத்தில், முட்டை உற்பத்தி மற்றும் தேவையை அனுசரித்து, முட்டை விலையை நிர்ணயம் செய்யலாம். பண்ணையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|