பதிவு செய்த நாள்
06 பிப்2019
23:25
புதுடில்லி:‘அமேசான்
இந்தியா’ நிறுவனம், சில நாட்களாக, பிஸ்கட், தேயிலை உள்ளிட்ட சில
உணவுப் பொருட்களை, மீண்டும் விற்பனை செய்யத் துவங்கியுள்ளது.
மின்னணு சில்லரை விற்பனையில், அன்னிய நேரடி முதலீடு தொடர்பான புதிய விதிமுறைகள், பிப்., 1ல் அமலுக்கு வந்தன.இதன்படி,
அமேசான் போன்ற வலைதள சந்தை நிறுவனங்கள், பங்கு முதலீடு செய்துள்ள
நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக, அமேசான், ஆயிரக்கணக்கான பொருட்களின் விற்பனையை நிறுத்தி இருந்தது.
இந்நிலையில், தற்போது பிஸ்கட், தேயிலை உள்ளிட்ட சில உணவுப் பொருட்களை, டில்லி, மும்பையில் மீண்டும் விற்பனை செய்யத் துவங்கியுள்ளது.இவை,
அமேசான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கு முதலீடு
செய்திராத நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.எனினும்,
‘அமேசான் பேன்ட்ரி’ வலைதள சந்தை பிரிவில், அதன், ‘பிரஸ்டோ’ பிராண்டு
வீட்டு துாய்மைப் பொருட்கள் கிடைக்கவில்லை என, பலர் ‘டுவிட்டரில்’
புகார் தெரிவித்து உள்ளனர்.
இதனிடையே, மத்திய அரசின் புதிய
விதிமுறையால் பாதிக்கப்பட்டுள்ள, ‘வால்மார்ட்’ நிறுவனம்,
‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தில் இருந்து வெளியேறுவது குறித்து பரிசீலிப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|