பதிவு செய்த நாள்
07 பிப்2019
10:44
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் இன்று (பிப்.,07) புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன. ரிசர்வ் வங்கி இன்று பிற்பகலில் அறிவிக்க உள்ள புதிய கொள்கை மீதான நம்பிக்கை காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பலவும் பங்குச்சந்தையில் அதிக முதலீடு செய்ததே பங்குச்சந்தைகளின் அதிரடி உயர்விற்கு காரணமாக கூறப்படுகிறது.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9.15 மணி நிலவரம்) சென்செக்ஸ் 161.53 புள்ளிகள் உயர்ந்து 37,136.76 புள்ளிகளாகவும், நிப்டி 33.05 புள்ளிகள் உயர்ந்து 11,095.50 புள்ளிகளாகவும் உள்ளன. பஜாஜ் ஆட்டோ, எச்சிஎல் டெக், டாடா மோட்டார்ஸ், மாருதி, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட நிறுவன பங்குகள் 2.64 சதவீதம் உயர்ந்துள்ளன. டாடா ஸ்டீல், எச்டிஎப்சி, பாரதி ஏர்டெல், வேதாந்தா நிறுவன பங்குகள் 0.51 சதவீதம் சரிவடைந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|