பதிவு செய்த நாள்
12 பிப்2019
11:04
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளான இன்று(பிப்.,12) ஏற்ற, இறக்கமான சூழலில் வர்த்தகமாகின்றன. பணவீக்கம், தொழில் துறை உற்பத்தி விபரங்கள் இன்று வெளியாக இருப்பதால், அதன் மீதான எதிர்பார்ப்பு காரணமாகவும், முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்வதாலும் ஏற்ற, இறக்கமான சூழல் நிலவுகிறது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 3.66 புள்ளிகள் சரிந்து, 36,391.37ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 3.95 புள்ளிகள் சரிந்து 10,884.85ஆகவும் வர்த்தகமாகின. தொடர்ந்து காலை 11மணியளவில் சென்செக்ஸ் 3.32 புள்ளிகள் சரிந்தும், நிப்டி 3.4 புள்ளிகள் உயர்ந்தும் வர்த்தகமாகின.
ரூபாயின் மதிப்பு ஏற்றம்
இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற - இறக்கமாக காணப்பட்டாலும், ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகிறது. 11மணியளவில், அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 22 காசுகள் உயர்ந்து ரூ.70.94ஆக வர்த்தகமானது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|