பதிவு செய்த நாள்
12 பிப்2019
23:17
‘போலி பில்கள் மூலமாக, ஜி.எஸ்.டி., வரிச்சலுகை பெற்றது கண்டுபிடிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை, சிறை தண்டனை நிச்சயம்’ என, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் அமலுக்கு வந்த பின், போலி, ‘பில்’கள் மூலமாக, சலுகைகள் பெறுவது, அதிகரித்து வருகிறது. போலி பில் தயாரிப்பதற்காக, ஜி.எஸ்.டி., பதிவு எண் பெற்று, போலி நிறுவனங்கள் துவங்கப்படுகின்றன.இவற்றை தடுக்கும் விதமாக, சென்னையில் மட்டும், இதுவரை, ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 400 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அசல் – போலி பில்லுக்கு இடையே வித்தியாசம் தெரியாத வகையில், துல்லியமாக அச்சிடுகின்றனர். மிகவும் நுட்பமாக பார்த்தால் மட்டுமே, போலியை கண்டுபிடிக்க முடியும்.சில நேர்மையான உற்பத்தி நிறுவனங்கள், வணிகர்கள் வரிச் சலுகை பெறுவதற்காக, இதுபோன்ற போலி பில் தயாரிப்பவர்களை அணுகுகின்றனர். ‘கமிஷன்’ பெற்று, போலி பில்களை அளிக்கின்றனர்.
போலி பில்கள் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டால், மோசடி செய்த தொகைக்கு, 24 சதவீத வட்டியும், 100 சதவீத அபராதமும் விதிக்கப்படும். மேலும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதிகபட்சம், ஏழு ஆண்டு சிறை தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.இதனால், போலி பில்கள் வழங்கி, வரி சலுகை பெற, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள் முயற்சிக்க வேண்டாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|