‘டிராய்’ உத்தரவை மீறத்துடிக்கும் தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் ‘டிராய்’ உத்தரவை மீறத்துடிக்கும் தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் ...  தொழில் துறை உற்பத்தி 2.4 சதவீத வளர்ச்சி தொழில் துறை உற்பத்தி 2.4 சதவீத வளர்ச்சி ...
போலி பில்களை பயன்படுத்தினால் ஏழு ஆண்டு சிறை என எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2019
23:17

‘போலி பில்கள் மூலமாக, ஜி.எஸ்.டி., வரிச்சலுகை பெற்றது கண்டுபிடிக்கப்பட்டால், ஏழு ஆண்டுகள் வரை, சிறை தண்டனை நிச்சயம்’ என, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


இது குறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கூறியதாவது:


ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் அமலுக்கு வந்த பின், போலி, ‘பில்’கள் மூலமாக, சலுகைகள் பெறுவது, அதிகரித்து வருகிறது. போலி பில் தயாரிப்பதற்காக, ஜி.எஸ்.டி., பதிவு எண் பெற்று, போலி நிறுவனங்கள் துவங்கப்படுகின்றன.இவற்றை தடுக்கும் விதமாக, சென்னையில் மட்டும், இதுவரை, ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; 400 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அசல் – போலி பில்லுக்கு இடையே வித்தியாசம் தெரியாத வகையில், துல்லியமாக அச்சிடுகின்றனர். மிகவும் நுட்பமாக பார்த்தால் மட்டுமே, போலியை கண்டுபிடிக்க முடியும்.சில நேர்மையான உற்பத்தி நிறுவனங்கள், வணிகர்கள் வரிச் சலுகை பெறுவதற்காக, இதுபோன்ற போலி பில் தயாரிப்பவர்களை அணுகுகின்றனர். ‘கமிஷன்’ பெற்று, போலி பில்களை அளிக்கின்றனர்.


போலி பில்கள் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டால், மோசடி செய்த தொகைக்கு, 24 சதவீத வட்டியும், 100 சதவீத அபராதமும் விதிக்கப்படும். மேலும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதிகபட்சம், ஏழு ஆண்டு சிறை தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.இதனால், போலி பில்கள் வழங்கி, வரி சலுகை பெற, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள் முயற்சிக்க வேண்டாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)