பதிவு செய்த நாள்
12 பிப்2019
23:26
புதுடில்லி:மத்திய அரசு, நாளை மேற்கொள்ளும், பாரத் – 22 இ.டி.எப்., வெளியீட்டில், 3,500 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட திட்டமிட்டுள்ளது.இது, கூடுதல் வெளியீடு என்பதால், நாளை ஒரு நாள் மட்டும், நிதி நிறுவனங்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்து, 80ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தாண்டு, இதுவரை, பங்கு விலக்கல் மூலம், 32 ஆயிரத்து,998 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. இதில், இரு கட்டங்களில், பாரத் 22 இ.டி.எப்., வெளியீடுகள் மூலம் கிடைத்த, 22 ஆயிரத்து, 900 கோடி ரூபாயும் அடங்கும். இத்திட்டத்திற்கு, முதலீட்டாளர்களிடம் அதிக வரவேற்பு காணப்பட்டது.
இத்திட்டத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த, 16 நிறுவனங்கள், மூன்று வங்கிகள் மற்றும் மூன்று தனியார் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், இத்திட்டம் பட்டியலிடப்பட்டு, வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|