தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 சரிவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.80 சரிவு ...  ‘சிங்கிள் பிராண்ட்’ சில்லரை விற்பனை விதி திருத்தம்  அன்னிய நேரட முதலீட்டை அதிகரிக்க திட்டம் ‘சிங்கிள் பிராண்ட்’ சில்லரை விற்பனை விதி திருத்தம் அன்னிய நேரட ... ...
நன்கொடை வழங்கியதில் முகேஷ் அம்பானி முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2019
23:23

புதுடில்லி:கல்வி, வாழ்வாதாரம், இயற்கை இடர்ப்பாடு போன்றவற்றுக்கு, தாராளமாக நன்கொடை வழங்கியோரில், ‘ரிலையன்ஸ்’ குழும தலைவர், முகேஷ் அம்பானி முதலிடத்தை பிடித்துஉள்ளார்.

ஹூருன் ஆய்வு மையம், 2017 அக்., 1 முதல், 2018, செப்., 30 வரை, நன்கொடை அளித்தவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், பெரும்பான்மையானோர், கல்விக்கு நன்கொடை அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.இந்த வகையில், 3.45 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புள்ள, முகேஷ் அம்பானி, கல்விக்காக, 437 கோடி ரூபாய் நன்கொடை அளித்து, முதலிடத்தில் உள்ளார்.

அடுத்த இடத்தில், ‘பிரமல் என்டர்பிரைசஸ்’ நிறுவன தலைவர், அஜய் பிரமால், 200 கோடி ரூபாய் கல்விக்காக வழங்கியுள்ளார்; இவர் சொத்து மதிப்பு, 30 ஆயிரம் கோடி ரூபாய். மூன்றாவது இடத்தில் உள்ள, ‘விப்ரோ’ தலைவர், அசீம் பிரேம்ஜி. 200 கோடி ரூபாய் கல்விக்காக வழங்கியுள்ளார்.‘கோத்ரெஜ்’ குழும தலைவர், ஆதி கோத்ரெஜ், மக்கள் வாழ்வாதார மேம்பாட்டிற்கு, 96 கோடி ரூபாய் அளித்துள்ளார்;

இவர் சொத்து மதிப்பு, 19 ஆயிரம் கோடி ரூபாய்.‘லுாலுா’ குழும தலைவர், யூசுப் அலியின் சொத்து மதிப்பு, 33 ஆயிரம் கோடி ரூபாய். இவர், இயற்கை இடர்பாடு நிவாரண நிதியாக, 70 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்.எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் நிறுவனர், ஷிவ் நாடார், கல்விக்காக, 56 கோடி ரூபாய் அளித்துள்ளார்; இவர் சொத்து மதிப்பு, 1 லட்சம் கோடி ரூபாய்.

அடுத்த இடங்களில், ‘ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ்’ நிறுவனர், சவ்ஜி தோலாக்யா, ஷபூர்ஜி பலோன்ஜி மிஸ்திரி, சைரஸ் மிஸ்திரி, கவுதம் அதானி ஆகியோர், முறையே, 40 கோடி, 36 கோடி மற்றும் 36 கோடி ரூபாய், கல்விக்காக நன்கொடை வழங்கியுள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)