பதிவு செய்த நாள்
23 பிப்2019
02:52
புதுடில்லி: தென் கிழக்கு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு, மிகப் பெரிய அளவில் முதலீட்டு வாய்ப்புகள், இந்தியாவில் இருப்பதாக, வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர், சி.ஆர்.சவுத்ரி கூறியுள்ளார்.‘இந்தியா- ஏஷியான் எக்ஸ்போ – 2019’ மாநாட்டில் பங்கேற்ற, சி.ஆர்.சவுத்ரி, மேலும் கூறியதாவது:மருத்துவ சாதனங்கள், மீன் பிடிப்பு, கப்பல் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில், தென் கிழக்கு நாடுகள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன.ஏஷியான் எனும், தென் கிழக்கு நாடுகளின் கூட்டமைப்பைச் சேர்ந்த நிறுவனங்களும், இந்திய நிறுவனங்களும் இணைந்து, இங்கு கூட்டாக தொழில் துவக்கலாம்.‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம், முதலீடுகளை ஈர்ப்பதற்காக, நிறைய சட்டங்களையும், விதிமுறைகளையும் இந்தியா சுலபமாக்கி இருக்கிறது.இந்தியாவுக்கு மருத்துவ சாதனங்கள், கருவிகள் ஆகியவை தேவைப்படுகின்றன. இப்பிரிவுகளில், ஏஷியான் நிறுவனங்கள் வாய்ப்பை பெறலாம். குறு, சிறு, நடுத்தர தொழில் பிரிவில், இரு தரப்பும் அதிகளவில் இணைந்து செயல்படலாம்.விமான சேவை, மீன் பிடிப்பு, கப்பல் கட்டுமானம் ஆகியவற்றில், இந்தியா முதலீட்டை அதிகரிக்க விரும்புகிறது. இந்த வாய்ப்புகளையும் பயன்படுத்தலாம்.இரு தரப்புக்கும் இடையேயான வர்த்தகம், 2005- – 06ல், 2,100 கோடி டாலராக இருந்தது, 2017 – -18ல், 8,233 கோடி டாலராக அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|