பதிவு செய்த நாள்
23 பிப்2019
23:23
நாமக்கல்: வெயில் தாக்கம், தண்ணீர் தட்டுப்பாடு, தீவனம் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், முட்டைக்கோழிகளை, 10 வாரத்துக்கு முன் விற்பனை செய்யும் நிலைக்கு, பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள், 80 வாரம் வரை முட்டையிடும். அதன் பின், இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றின் விலையை, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு, ‘நெக்’ வியாபாரிகள் முடிவு செய்வர். பிப்., 1ல், 62 ரூபாய், 2ல், 59; 9ல், 64; 19ல், 62 ரூபாய் என, விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது.கடந்த, 21ல், 59 ரூபாய் என, விலை குறைக்கப்பட்டது. உற்பத்தி செலவை காட்டிலும், குறைவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டதுடன், கொள்முதல் விலையிலிருந்து, 14 ரூபாய் குறைத்து, வியாபாரிகள், முட்டைக்கோழிகளை வாங்குவதால், பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர், வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:முட்டைக்கோழிகள், கர்நாடகாவுக்கு, 60, கேரளாவுக்கு, 40 சதவீதம் விற்பனை செய்யப்படுகின்றன. முட்டை விலை ஏற்றம், இறக்கத்தை பொறுத்து விலை நிர்ணயிக்கப்படும்.தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, தீவனம் விலை உயர்வால், 85 வாரத்தில் விற்பனை செய்யும் கோழிகளை, 70, 75 வாரத்திலேயே விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், வரும் நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், கோழிகளுக்கு பற்றாக்குறை அதிகரிக்கும். அவற்றை கருத்தில் கொண்டும், 10 வாரத்துக்கு முன்னதாகவே, கோழிகளை விற்பனை செய்யும் நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.வியாபாரிகளும், நெக் நிர்ணயித்துள்ள விலையில் இருந்து, 14 ரூபாய் குறைத்து, கோழிகளை கொள்முதல் செய்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|