பதிவு செய்த நாள்
01 மார்2019
07:17
ஜி.எஸ்.டி., குறித்து குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 200 ரூபாய்க்கு குறைவாக வாங்கும் பொருட்களுக்கு, பில் பெறும் குழந்தைகளுக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்பட உள்ளது.
இது குறித்து, ஜி.எஸ்.டி.,புறகநர் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:ஜி.எஸ்.டி., சட்டத்தை பொறுத்தவரை, 200 ரூபாய்க்கு குறைவாக பொருட்கள் வாங்கினாலும், வாடிக்கையாளர் பில் கேட்டால், வணிகர்கள் தர வேண்டும்.மேலும், 200 ரூபாய்க்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு கேட்காமலே தர வேண்டும். இந்த விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்த, நாங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளோம். 200 ரூபாய்க்கு குறைவாக வாங்கிய பொருட்களுக்கு, பில் வாங்கும் குழந்தைகளுக்கு பரிசு அளிக்க உள்ளோம். இதற்காக, சென்னை அண்ணாநகரில் உள்ள, சென்னை புறநகர், ஜி.எஸ்.டி., ஆணையர் அலுவலகத்தில் ஒரு பெட்டி வைத்துள்ளோம்.
அதில், 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், தாங்கள் பெற்ற பில்லுக்கு பின்பக்கத்தில் தங்களது பெயர், பகுதி, தொடர்பு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஆணையர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட வேண்டும்.அதிலிருந்து, மூன்று பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசு வழங்க உள்ளோம். மார்ச் 8ம் தேதி, இந்த பெட்டி திறக்கப்பட்டு, வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்க உள்ளோம். 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இதில் பங்கேற்று வெற்றி பெறலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|